Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் பொருட்களுக்கு உசிலம்பட்டி நகராட்சியில் தடை

Print PDF

தினமலர் 27.08.2010

பிளாஸ்டிக் பொருட்களுக்கு உசிலம்பட்டி நகராட்சியில் தடை

உசிலம்பட்டி:உசிலம்பட்டி நகராட்சியின் அவசர கூட்டம் நேற்று மாலை 5.00 மணியளவில் நகராட்சித் தலைவி பழனியம்மாள் தங்கமலைப்பாண்டி தலைமையில் நடந்தது. கமிஷனர் சரவணகுமார், துணைத் தலைவர் சின்னன் முன்னிலை வகித்தனர். 24 வார்டுகளில் ஐந்து கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை.உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பயன்படுத்தப் படும் பிளாஸ்டிக் பைகள், கேரி பேக்குகள், பிளாஸ்டிக் டீ கப்புகள் உள்ளிட்டவற்றை கழிவு வாய்க்காலில் கொட்டுவதால், அதன் சீரான ஓட்டம் தடைபடுகிறது.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துதல், விற்பனை செய்தல் ஆகியவற்றை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தடையை மீறி மொத்த விற்பனை, சில்லரை விற்பனை மற்றும் பயன்படுத்துபவர்களிடம் இருந்து பறிமுதல் செய்வதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.நகராட்சி எல்லைக்குள் தன்னிச்சையாக குப்பை கொட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றினர்.

கோழிக்கடைகளை வைத்துள்ளவர்கள் சுகாதாரமற்ற வகையில் கோழிக்கழிவுகளை கண்மாய்க்குள் கொட்டுவதை தடுக்கவேண்டும் என கவுன்சிலர் உக்கிரபாண்டி கோரிக்கை விடுத்தார். நகராட்சி எல்லைக்குள் ஆட்டுக்கறி கடை போடுவர்கள் ஆடுகளை ஆடு அடிக்கும் தொட்டியில் வைத்துதான் வெட்ட வேண்டும். சுகாதாரமற்ற முறையில் ஆடுகளை தெருக்களில் வெட்டினாலும், சுகாதாரமற்ற வகையில் கடையில் கறிகளை வைத்திருந்தாலும் பறிமுதல் செய்யப்படும். மேலும், குடிநீர் குழாய் இணைப்புகளில் மோட்டார் பொருத்தியிருந்தாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கமிஷனர் தெரிவித்தார்.

 

பண்ருட்டி கெடிலம் ஆற்றில் குப்பைகள் கொட்டி எரிப்பு எப்போது திருந்தும் நகராட்சி நிர்வாகம்

Print PDF

தினமலர் 25.08.2010

பண்ருட்டி கெடிலம் ஆற்றில் குப்பைகள் கொட்டி எரிப்பு எப்போது திருந்தும் நகராட்சி நிர்வாகம்

பண்ருட்டி : பண்ருட்டி கெடிலம் ஆற்றில் குப்பைகளை கொட்டி எரிப்பதை மாவட்ட நீதிபதி கண்டித்தும் நகராட்சி நிர்வாகம் மீண்டும் அதே செயலை செய்து சுற்றுச்சூழலை பாதிப்பிற்குள்ளாக்கி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பண்ருட்டி நகராட்சி பகுதியில் உள்ள குப்பை கழிவுகளை நகராட்சி ஊழியர்கள் சேகரித்து அதனை கொட்டுவதற்கு இடமில்லாமல் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் கெடிலம் ஆற்றங்கரையொட்டி உள்ள சுடுகாட்டில் கொட்டி வந்தனர். சுடுகாட்டில் பிணம் புதைக்க இடமில்லாத அள விற்கு குப்பைகள் மலை போல் குவிந்தது.

இதனால் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாக மணிநகர் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் எதிரில் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள உரக்கிடங்கில் குப்பைகளை கொட்டினர்.குடியிருப்பு பகுதிகள் நிறைந்த பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டுவதால் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் குப்பைகளை கொட்டுவதற்கு மாற்று இடம் தேர்வு செய்யாமல் கெடிலம் ஆற்றில் கொட்டுவதற்கு பச்சைகொடி காட்டினர்.இதனால் கெடிலம் ஆற்றுப் பகுதி முழுவதும் குப்பைகள், பிளாஸ்டிக் மற்றும் இறைச்சிக் கழிவுகள் என துர்நாற்றம் வீசும் பகுதியாக விளங்கி வருகிறது.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் ஐகோர்ட் நீதிபதி குலசேகரன் உத்தரவின் பேரில் அப்போதைய கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதி ராமகிருஷ்ணன், கெடிலம் ஆற்றில் மாசு ஏற்பட்டுள்ளதை பார்வையிட்டு அப்போதைய நகராட்சி கமிஷனர் மதிவாணனிடம், இனிமேல் கெடிலம் ஆற்றில் குப்பைகள் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.மேலும், கடந்த ஆண்டு டி.ஆர்.., நடராஜன் கெடிலம் ஆற்றை பார்வையிட்டு மாற்று இடம் தேர்வு செய்து 10 நாளில் வழங்கப்படும் என உறுதி அளித்தார். அதன் பின்னர் உரக்கிடங்கு அமைக்க வருவாய் மற்றும் நகராட்சி துறையினர் இடம் தேர்வு செய்யவில்லை.

நீதிபதி எச்சரித்து சில மாதங்கள் கழித்து மீண்டும் குப்பைகள் ஆற் றில் கொட்டப்பட்டு எரிக்கப் பட்டு வருகிறது.இதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம், பொதுப் பணித் துறையினர் நிலத்தடி நீர் மட்டம் சேமிப்போம், மாசு ஏற்படாமல் தவிர்ப்போம் என வாசகம் மட்டும் எழுதி வைக்கின்றனரே தவிர வரும் கால சந்ததியினர் பயன்படுத்தக்கூடிய புனிதமான கெடிலம் நதிக்கரை வீணாவதை தடுத்திட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.மக்கள் பிரதிநிதிகளும் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய நகராட்சி நிர்வாகமே சுற்றுச்சூழல் பாதிக்கும் அளவிற்கு அடாவடியாக நாள் ஒன்றுக்கு 10க்கும் மேற் பட்ட லாரிகளில் குப்பைகளை கொண்டு சென்று எரித்து வருவதை இனி யார்தான் தட்டிக் கேட்பது என தெரியவில்லை.

 

20 ஆயிரம் மூங்கில் கன்று நட திட்டம்

Print PDF

தினகரன் 25.08.2010

20 ஆயிரம் மூங்கில் கன்று நட திட்டம்

கோவை, ஆக 25: கோவை வெள்ளலூர் குப்பை கிடங் கில் 20 ஆயிரம் மூங்கில் மரக்கன்று நட திட்டமிடப்பட்டுள்ளது. கோவை வெள்ளலூரில் மாநகராட்சியின் குப்பை கிடங்கு உள்ளது. 640 ஏக்க ரில் அமைந்துள்ள இந்த குப்பை கிடங்கில் 39.4 ஏக்கர் நிலத்தை தனியார் அறக்கட்டளை அபகரித்து மனைகளாக மாற்றியது.

இதைதொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகத்தினர் நிலத்தை கைப்பற்றினர். குப்பை கிடங்கு வளாகம் சுற்றுப்பரப்பு 5 கி.மீ தூரம். இதில் 3.5 கி.மீ சுற்றளவிற்கு சுற்றுசுவர் கட்டப்பட்டது. இன்னும் 1.5 கி.மீ தூரத்திற்கு சுற்றுசுவர் கட்டவேண்டும்.முழுமையாக சுற்றுசுவர் கட்டினால் மட்டு மே குப்பை கிடங்கு வளாகத்தில் ஆக்கிரமிப்பை தடு க்க முடியும். ஆனால், மாநகராட்சியினர் பல ஆண்டுகளாக சுற்றுசுவர் கட்டுவ தில் தாமதம் செய்து வருகி றது. இதனால், ஆக்கிரமிப்பும், திருட்டும் அதிக மாகி விட்டது. மாநகராட்சி குப்பை கிடங்கு வளாகத்தில் பிளாஸ் டிக், இரும்பு, தளவாட பொருட்கள், டீசல், குப்பை களில் கலந்து வரும் இரும்பு கழிவு போன்றவை தின மும் திருடப்படுகிறது.

இதை தடுக்க, தனியார் செக்யூரிட்டிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களில் சிலர் திருட்டிற்கு உடந்தையாக இருப்பதாக தெரிகிறது. குப்பை கிடங்கு வளாகத்தில் வனத்துறையின் காடு வளர்ப்பு திட்டத்தில் நடப்பட்ட 5 ஆயிரம் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. தற்போது, மாநகராட்சி சார்பில் 500 வேம்பு, வாகை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட் டது. மாநகராட்சி சார்பில் 93.50 கோடி ரூபாய் செல வில் திடக்கழிவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

குப்பை கிடங்கு வளா கம் பசுமை பூங்காவாக மாற்ற திட்டமிடப்பட்டது. விஞ்ஞான ரீதியான கழிவு கட்டமைப்பு, குப்பை தரம் பிரிப்பு எதுவும் சரியாக நடக்கவில்லை. குப்பை மேடு வளாகத் தில் ஈ, கொசு தொல்லை, துர்நாற்றம் தொடர்ந்து அதிகரிக்கிறது. நாற்றம் தடுக்க கிருமி நாசினி தெளி ப்பு பணியும் நடத்தவில் லை. பல ஆண்டுகளாக தொடரும் பிரச்னைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.

மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், " வெள் ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் 20 ஆயிரம் முள் இல்லாத மூங்கில் நட்டு வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இது காற்றை சுத்தம் செய்யும் கார்பன் டை ஆக்சைடு அளவு குறைந்து ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். சுற்றியுள்ள குடியிருப்புகள் சுகாதாரகேட்டினால் பாதிக்காது. அந்த அளவிற்கு திட் டம் செயல்படுத்தப்படும். விரைவில் 20 லட்ச ரூபாய் செலவில் 1300 மீட்டர் தூரத் திற்கு சுற்றுச்சுவர் கட்டப்படும். இதன் மூலம் குப்பை கிடங்கில் வெளிநபர் அத்துமீறி புக முடியாது, " என்றார்.

 


Page 75 of 135