Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் பைகளை கட்டுப்படுத்த குழு

Print PDF

தினமலர் 20.08.2010

பிளாஸ்டிக் பைகளை கட்டுப்படுத்த குழு

தேனி : பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் கடைகள் ஓட்டல்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி கமிஷனர் மோனி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தேனி நகராட்சி பகுதியில் அனைத்து கடைகள், ஓட் டல்கள், வர்த்தக நிறுவனங்களிலும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்த தடையினை தீவிரமாக அமல்படுத்த எனது தலைமையில் சுகாதாரத்துறை அலுவலர்களை கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டுள் ளது. இக்குழுவினர் இன்று முதல் சோதனை மேற்கொள்ள உள்ளனர். பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தும் கடைகள் ஓட் டல்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் உடனடியாக விதிக்கப்படும். சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார்.

 

கோவில்பட்டியில் செப்.1 முதல் பிளாஸ்டிக் கப் பயன்படுத்த தடை

Print PDF

தினகரன் 19.08.2010

கோவில்பட்டியில் செப்.1 முதல் பிளாஸ்டிக் கப் பயன்படுத்த தடை

கோவில்பட்டி, ஆக. 19: கோவில்பட்டி நகராட்சி கமிஷனர் விஜயராகவன் விடுத்துள்ள செய்திகுறிப்பு:

கோவில்பட்டி நகராட்சி பகுதிக்குள் பொதுசுகாதார நலன் கருதியும் பொதுமக்கள் நலன் கருதியும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்துவதையும், விற்பனை செய்வதையும் செப்.1ம் தேதி முதல் தடை செய்து நகர்மன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

எனவே பொதுமக்கள், சில்லரை மற்றும் மொத்த விற்பனையாளர்கள், கடை உரிமையாளர்கள் அனைவரும் பொதுமக்கள் நலன்கருதி செப்.1ம் தேதி முதல் சுகாதாரகேடு ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது.

இதற்கு மாற்று ஏற்பாடாக எளிதில் மக்கும் தன்மையுள்ள பேப்பர் கப்புகளை பயன்படுத்தவும், விற்பனை செய்ய வேண்டும். தவறினால் நகராட்சி பொது சுகாதார சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த ஆய்வு! நகராட்சி செயல் அலுவலர் அறிவிப்பு

Print PDF

தினமலர் 19.08.2010

பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த ஆய்வு! நகராட்சி செயல் அலுவலர் அறிவிப்பு

பந்தலூர் : ""பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த, நகராட்சிப் பணியாளர்கள், வார்டு கவுன்சிலர்களால் ஆய்வு நடத்தப்படும்,'' என, நகராட்சி செயல் அலுவலர் தெரிவித்தார்.நெல்லியாளம் நகராட்சியில் மாதாந்திர கூட்டம் நடத்தப்பட்டது. ஜூலை மாத வரவு 86 ஆயிரத்து 801, செலவு 4 லட்சத்து 90 ஆயிரத்து 826 ரூபாய், ஜூலை மாதம், நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிறப்பு 12, இறப்பு 7 என தெரிவிக்கப்பட்டது. பந்தலூர் பயணியர் நலச்சங்கம் சார்பில், பயணியர் நிழற்குடையில் பேருந்து கால அட்டவணை வைக்க அனுமதிக்கப்பட்டது.

ஜெயசீலன்: மூச்சிக்குன்னு ஆதிவாசி காலனிக்கு செல்லும் சாலையை சீரமைக்காவிட்டால், போராட்டம் நடத்தப்படும்.

தலைவர் காசிலிங்கம்: பணி மேற்பார்வையாளரால் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சேகர்: தேவாலா மயானத்துக்கான சிமென்ட் சாலை மேடான பகுதியில் உள்ளதால், மழை காலங்களில் சிரமம் ஏற்படுகிறது; தார் சாலையாக மாற்ற வேண்டும்.

தலைவர்: அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கலாம்.

கோபிநாதன்: தேவாலா மயானம் 65 சென்ட் நிலத்தில் உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது 5 சென்ட் நிலம் மட்டுமே உள்ளது; நிலத்தை அளந்து, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

தலைவர்: வருவாய் துறையினர் மூலம் நில அளவைக்கு நடவடிக்கை எடுக்கலாம்.

துணைத் தலைவர் இப்ராஹிம்: தேவாலா போலீஸ் ஸ்டேஷன் சாலை-பஜார் சாலைப் பகுதிகளில், கால்வாய் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், பாதசாரிகள் அவதிப்படுகின்றனர்.

செயல் அலுவலர் வேணுகோபால்: பணிக்கான மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது; டெண்டர் விடப்பட்டு பணிகள் துவக்கப்படும்.

ஆறுமுகம்: மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள வரவேற்பு பலகைகள், பராமரிப்பின்றி உள்ளது; சீரமைக்க வேண்டும்.

தலைவர்: வரவேற்பு பலகைகள் சீரமைக்கப்பட்டு, புதிதாக வாசகங்கள் எழுதி வைக்கலாம்.

பிரகாஷ்: காலனி செல்லும் சாலையோரம், 4 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட கால்வாய் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவர்: ஒப்பந்ததாரரிடம் விசாரித்து உடனடியாக முழுமைப்படுத்தப்படும்.

சரோஜாதேவி: பழுதடைந்துள்ள பந்தலூர் காலனி செல்லும் சிமென்ட் சாலையை சீரமைக்க வேண்டும்.

பணி மேற்பார்வையாளர் ஆல்துரை: உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில், சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

சந்திரன்: பந்தலூர் இன்ட்கோ நகர் பகுதியில், 1986ம் ஆண்டு 83 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது; மேடான பகுதியில் உள்ள கிராமத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தவில்லை.

தலைவர்: சாலை வசதி ஏற்படுத்துவது குறித்து ஏற்பட்ட பிரச்னையை தீர்க்க, மாவட்ட வருவாய் அலுவலரை அணுகலாம். முதற்கட்டமாக, கிராமத்துக்கு நடைபாதை வசதி ஏற்படுத்தலாம்.

""பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த, நகராட்சிப் பணியாளர்கள், வார்டு கவுன்சிலர்களை கொண்டு ஆய்வு நடத்தப்படும். பந்தலூர் பஜாரில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அபராதம் விதிக்கப்படும்,'' என, செயல் அலுவலர் தெரிவித்தார்.

Last Updated on Thursday, 19 August 2010 08:39
 


Page 76 of 135