Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

ஓட்டல்களில் பாலித்தீன் பைகளுக்கு தடை : சுற்றுச்சூழலை பாதுகாக்க திட்டம்

Print PDF

தினமலர் 26.07.2010

ஓட்டல்களில் பாலித்தீன் பைகளுக்கு தடை : சுற்றுச்சூழலை பாதுகாக்க திட்டம்

காரைக்குடி : சுற்றுச்சூழல் மாசு ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது பாலித்தீன் பைகள். ஆக.,1ம் தேதி முதல் இவற்றை பயன்படுத்த காரைக்குடி நகராட்சி தடை விதித்துள்ளது. இத்தடையை மாவட்டம் முழுவதும் பின்பற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பாலித்தீன், பிளாஸ்டிக் பொருட்கள் 400 ஆண்டுகளானாலும், அதற்கு மக்கும் தன்மை இல்லை. இதனால், பூமியில் சேகரமாகும் கழிவுகள் பல ஆண்டுகளாகியும் அப்படியே இருப்பதால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதிக்கிறது.

பாலித்தீன் கழிவுகளை எரித்தால் அதில் ஏற்படும் கரும்புகையில் மாசு ஏற்பட்டு, சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். குப்பைகளில் போடப்படும் பாலித்தீன் கழிவு பொருட்களை கால் நடைகள் உண்பதினால், அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதுபோன்று பல் வேறு வகையில், சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பாலித்தீன், பிளாஸ்டிக் பொருட்களுக்கு காரைக்குடி நகராட்சி தடை விதித்துள் ளது. இதற்கான ஒப்புதல் கவுன்சில் கூட்டத்தில் வழங்கப்பட்டது.

தடை செய்ய ஆலோசனை: இதற்காக, நகரின் ஓட்டல் உரிமையாளர் களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், இதை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து தெரிவித்தனர். எனவே, பாலித்தீனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தவிர்க்க, ஓட்டல்கள், டீக்கடை, திருமண மண்டபம் உள்ளிட்ட உணவு கூடங்களில் கட்டாயம், "பேப்பர் கப்', "பேப்பர்' தட்டுகளை பயன்படுத்த உத்தரவிடப்பட்டது.

இது தவிர 20 மைக்ரான் அளவுள்ள பாலித்தீன் பைகளை கட்டாயம் பயன் படுத்த தடை விதித்துள்ளனர். இத்தடை உத்தரவு ஆக.,1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதை கடைபிடிக்காத கடைகளுக்கு அபராதம் விதிக்கப் படும் என நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், ஓட்டல், டீக்கடை உள்ளிட்ட உணவு பொருள் விற்பனையாளர்கள் கலக் கம் அடைந்துள்ளனர். பொதுமக்களிடத்தில் இத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இது குறித்து நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் கூறுகையில்,"" கன்னியாகுமரியில் பிளாஸ்டிக், பாலித்தீன் பைகளுக்கு தடை விதித்துள்ளனர். இதனால், பிளாஸ்டிக், பாலித்தீன் இல்லா மாவட்டமாக திகழ்கிறது. இங்கு பெட்டிகடை, பலசரக்கு கடை, ஓட்டல், ஜவுளிக்கடைகளில் பாலித்தீன் பைகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

இதனால் மக்காத குப்பைகள் அதிகரித்து, நகரின் தூய்மை கெட்டுவிடாமல் இருக்க, இதற்கு தடை விதித்துள்ளோம். இதை மீறினால் நகராட்சி சட்டப்படி அபராதம் விதிக்கப்படும்,'' என்றார்.

பாலித்தீன், பிளாஸ்டிக் பைகளுக்கு மாவட்ட முழுவதும் தடைவிதித்தால் மட்டுமே சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். இதில், கலெக்டர் முழு கவனம் செலுத்தவேண்டும்.

 

குற்றாலத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது

Print PDF

தினமலர் 26.07.2010

குற்றாலத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது

குற்றாலம் : "குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது' என நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., துணைவேந்தர் சபாபதிமோகன் வலியுறுத்தி பேசினார்.

குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் நேற்று 2வது நாள் சாரல் திருவிழா நடந்தது. மாலை 6 மணிக்கு துவங்கிய சாரல் திருவிழாவிற்கு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக துணைவேந்தர் சபாபதிமோகன் தலைமை வகித்து பேசினார். நெல்லை இந்தியன் பாங்க் துணை பொதுமேலாளர் மெய்யப்பன் முன்னிலை வகித்தார். சுகாதார பணிகள் இணை இயக்குநர் உஷாரிஷபதாஸ், மருத்துவம் மற்றும் குடும்பநல துணை இயக்குநர் நெடுஞ்செழியன், நெல்லை சுகாதார பணிகள் துணை இயக்குநர் மீரான்முகைதீன், சங்கரன்கோவில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் கலுசிவலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் இந்தியன் பாங்க் மேலாளர் கிருஷ்ணகுமார், பேராசிரியர் மணிக்குமார், தென்காசி தாசில்தார் பரமசிவம், பிஆர்ஓ ரவீந்திரன், குற்றாலம் டவுன் பஞ்., செயல் அலுவலர் ராஜையா, பணி ஆய்வாளர் கோபி, டவுன் பஞ்., கவுன்சிலர் மாடசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர

நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி விஜயராகவன் பேசியதாவது:- ""தமிழ்நாட்டிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலமாக குற்றாலம் விளங்கி வருகிறது. குற்றாலத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இவர்களை மகிழ்விக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் சாரல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். காடுகள் மற்றும் விலங்குகளை நாம் பாதுகாக்க வேண்டும்'' என்றார்.

துணைவேந்தர் சபாபதிமோகன் பேசியதாவது:- ""தமிழ்நாட்டில் அதிக வெப்பம் உள்ள பகுதியாக வேலூர் விளங்கி வருகிறது. இங்கு மலைகள் உண்டு. ஆனால் மரங்கள் இல்லை. இதனால் வெப்பம் அதிகமாக உள்ளது. ஆனால் குற்றாலம் அப்படியல்ல. மலைகளும், மரங்களும், தண்ணீரும் நிறைந்த பகுதியாகவும், சுத்தமான காற்றையும் தந்து கொண்டிருக்கிறது. எனவே சுற்றுலாவிற்கு வரும் பயணிகள் இப்பகுதியினை பாதுகாத்திட அருவிகளில் குளிக்கும்போது ஷாம்பூ, சோப்பு போன்றவைகளை தவிர்ப்பது நல்லது.

காடுகள், வனவிலங்குகள் போன்றவற்றை பாதுகாத்திட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். நமது தலைமுறையினரும் இங்கு வந்து செல்லும் அளவிற்கு குற்றாலத்தின் வளத்தினை பெருக்கிட சுற்றுலா பயணிகள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தரவேண்டும்'' என்றார்.

முன்னதாக ஆணழகன் போட்டியில் 60 கிலோ எடை பிரிவில் வெற்றி பெற்ற தருவைகுளம் அந்தோணிராஜ், நெல்லை நாராயணன், இசக்கிமுத்து ஆகியோருக்கும், 65 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவில் வெற்றி பெற்ற தென்காசி யாசர் அரபாத், நெல்லை சுடலைமுத்து, பீர்முகம்மது ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
பின்னர் மாலை 5.30 மணியளவில் சென்னை ஸ்ரீகணபதி தியேட்டர்சின் பல்சுவை நிகழ்ச்சியும், 8 மணியளவில் கலைமாமணி முத்தரசி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், சென்னை ராஜ்குமார் வழங்கிய மானாட மயிலாட நடன நிகழ்ச்சியும் நடந்தது.

சாரல் திருவிழாவின் 3வது நாளான இன்று (26ம் தேதி) மேலகரம் கணேஷ் குழுவினரின் கனியான் கூத்து, வழுவூர் ரவி குழுவினரின் திரைஇசையில் கலைஞர் நாட்டியம், டாக்டர் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் குழுவினரின் நாட்டுப்புற பாடல், ஆடல் நிகழ்ச்சி நடக்கிறது.

 

பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் ஆக்கிரமிப்பால் மாசுபடுகிறது பாளையங்கால்வாய் ரூ.47 கோடி திட்டத்தை துவங்க வேண்டும்?

Print PDF

தினகரன் 23.07.2010

பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் ஆக்கிரமிப்பால் மாசுபடுகிறது பாளையங்கால்வாய் ரூ.47 கோடி திட்டத்தை துவங்க வேண்டும்?

எஸ்.சீனிவாசன்

நெல்லை, ஜூலை 23: நெல்லை மாநகர பகுதியில் கழிவுநீர் கலப்பதாலும், பிளாஸ்டிக் கழிவு மற்றும் குப்பைகள் கொட்டப்படுவதாலும் பாளையங்கால்வாய் மாசுபட்டு நோய் கிருமிகளை உற்பத்தி செய்யும் கூடாரமாக மாறும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் பாசன தேவையை பூர்த்தி செய்வதில் 43 கி.மீ நீள முள்ள பாளையங்கால்வாய் முக்கிய பங்கு வகிக்கிறது. தாமிரபரணி நதியிலிருந்து விவசாய தேவைக்காக மேலச்செவல் அருகே உள்ள பழவூர் கிராம பகுதியில் பாளையங்கால்வாய்க்கு தண்ணீர் திருப்பி விடப்படுகிறது.

இந்த கால்வாயிலிருந்து கார் மற்றும் பிசான சாகுபடிகளுக்கு விவசாய பணிக்கு தண்ணீர் திறக்கப்படும். இதனை பொதுமக்கள் குளிக்கவும், வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்தி வந்தனர். பழவூரிலிருந்து கோபாலசமுத்திரம், தருவை, முன்னீர்பள்ளம் பகுதிகளில் கால்வாய் தண்ணீர் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் உள்ளது. ஆனால் மாநகராட்சி பகுதிகளான மேலப்பாளையம், பாளையங்கோட்டை மண்டலங்களில் உள்ள வீடுகளிலிருந்து வெளியாகும் அதிகப்படி யான கழிவு நீர், கோழி இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் கால் வாயில் கொட்டப்படுவ தால் தண்ணீர் அசுத்தமாகிறது.

இக்கால்வாய் மூலம் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயனடைகின்றன. கால்வாயில் கழிவு நீர் கலப்பதால் விளை நிலங்கள் பாழ்பட்டு விளைச்சலுக்கு உதவாத நிலமாக மாறிவருகின்றன.

கால்வாய் மாசுபடுவதை தவிர்க்க மாநகராட்சி மூலம் பல கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டத் தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்தது. ஆனால் இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. எனவே வீடுகளின் கழிவுநீர் பாளையங்கால்வாயில் கலந்து தாமிரபரணி ஆற்றில் சங்கமிக்கிறது.

இதனால் சிக்குன்குனி யா, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட நோய்களை பரப் பும் கிருமிகளும், கொடிய நச்சுதன்மையுள்ள பீக்கல் கோலிபார்ம் போன்ற வைரஸ் கிருமிகளின் பிறப்பிடமாகவும் பாளையங்கால்வாய் உள்ளது.

பாளையங்கால்வாய் கழிவுநீர் தாமிரபரணியில் கலப்பதால் ஆற்று நீரின் தன்மையும் மாறுபடுகிறது.

இதனால் ஆற்றில் குளிக்கும் மக்கள் தோல் நோய், முடிஉதிர்தல், கண் எரிச்சல் உள்ளிட்ட நோய் களால் பாதிக்கப்படுகின்றனர். கால்வாய் மற்றும் ஆற்று நீரை குடிக்கும் கால்நடைகளும் நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றன.

கடந்த 2008ம் ஆண்டு சட்டபை குழு நெல்லை மாவட்டத்தில் ஆய்வு செய்தபோது நெல்லை, பாளையம் கால்வாய்கள் மாசுபடுவதை தடுக்க ரூ.47 கோடி செலவில் திட்டம் தீட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகள் கழிந்தும் இதற்கான பணிகள் தொடங்காததால் பாளையங்கால்வாயில் கழிவுநீர், பிளாஸ்டிக் கழிவுகள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதே நிலைநீடித்தால் பாளையங்கால்வாய் கூவமாக மாறி விடும் என சமூகநல ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சேவை பாரதி கணேசன், மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு செய்துள்ளார்.

மாசுகட்டுப்பாட்டு வாரியம் மனது வைத்தால் மட்டுமே இதற்கு தீர்வு ஏற்படாது. வருங்கால சந்ததியினரின் நலன் கருதி பொதுமக்களும் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். வீட்டு கழிவுகள் பாதாள சாக்கடை திட்டத்தில் சேரும் விதமாக இணைப்பு ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்து மாநகராட்சியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே பாளையங்கால்வாயை பாதுகாக்க முடியும்.

 


Page 84 of 135