Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

நெல்லை மாநகராட்சியில் ஜூலை முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை

Print PDF

தினகரன் 28.06.2010

நெல்லை மாநகராட்சியில் ஜூலை முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை

நெல்லை, ஜூன் 28: நெல்லை மாநகரத்தில் வரும் ஜூலை முதல் வாரத்திற்கு பிறகு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:

ஒரே நாளில் நெல்லை மாநகராட்சி பகுதி முழுவதிலும் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஒரு அம்சமாக, ‘மாநகர தூய்மை முகாம்நடத்த நெல்லை மாநகராட்சி ஏற்பாடு செய்துள் ளது. இம்முகாமில் மக்களால் பயன்படுத்திய பிறகு தூக்கியெறியப்பட்டு, சாலை யோரம் மற்றும் திறந்த வெளிகள், மைதானங்களில் தேங்கி கிடக்கும் கழிவு பிளாஸ்டிக் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட உள் ளன. இதற்காக நடத்தப்பட்ட ஆய்வில் மொத்தம் 124 இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த 124 இடங்களிலும் மாநகர பகுதியிலுள்ள தன்னார்வ தொண்டர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் 1,800 பேர், மாநகராட்சி பணியாளர்கள் 700 பேர் சேர்ந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவர். மேலும் பொது மக்களிடம் பிளாஸ்டிக் கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தும் வித மாக துண்டு பிரசுரங்களை யும் இவர்கள் விநியோகிப் பர்.

இம்முகாமில் கவுன்சிலர்கள், மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இம் முகாம் ஜூலை மாதம் முதல் வாரத்தில் அனைத்து பகுதிகளிலும் ஒரே நாளில் நடைபெறும். இம் முகாமிற்கு பின்னர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை பயன்படுத்துவோர் மீதும், விற்பனை செய்வோர் மீதும், பொது இடங்களில் கொட்டுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வீடுகளில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளை குப்பைகளை சேகரிக்க வரும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் வசம் மட்டு மே ஒப்படைக்க வேண்டும். மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தனித்தனியே சேகரிப்பது முறைப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

எனவே பொது மக்கள் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைப்பது டன், பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை சாலையில் வீசுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

பிளாஸ்டிக் உடல் நலனுக்குக் கேடு

Print PDF

தினமணி 28.06.2010

பிளாஸ்டிக் உடல் நலனுக்குக் கேடு

நெகிழி என்று தமிழில் அழைக்கப்படும் பிளாஸ்டிக் இல்லாத தினசரி வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்ற நிலைக்கு நாம் வந்து விட்டோம். இது நிதர்சனம்.

பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று கூச்சல் போடுவது, பேரணி நடத்துவது எல்லாம் நூறு சதவீத வெற்றியைத் தருகிறதா என்பது கேள்விக்குறியே! நாம் எழுதும் பேனா முதல் வானில் பறக்கும் விமானம் வரை நெகிழியின் ஆதிக்கம் கோலோச்சுகிறது.

பிளாஸ்டிக் உடல் நலத்துக்கு கேடு என்பதை விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. அது நிலத்தில் மக்காது, நிலத்தடி நீர் அளவை பாதிக்கும், அதை எரிப்பதால் டை ஆக்ஸின் போன்ற பல தீமை விளைவிக்கக் கூடி வாயுக்கள் வெளியேறி சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இவை எல்லாம் தெரிந்தவைதான்.

சூடான திரவ உணவு வகைகள் காபி, பால், சாதம், சாம்பார், குருமா ஆகியவற்றை பாலிதீன் பைகள் அல்லது மெல்லிய பிளாஸ்டிக் டப்பாக்களில் சேமித்தால் நச்சுப் பொருள்கள் உணவில் ஊடுருவும். திரவ உணவுப் பொருள்களை சேமித்தால் படிம நச்சாக மெது, மெதுவாக உணவில் சேருகிறது. உப்பிட்ட பொருள்கள், ஊறுகாய்கள், புளிச்சத்து நிறைந்த பழச்சாறு இவற்றில் பிளாஸ்டிக் கலக்கிறது. பிஸ்கட், மிக்ஸர் போன்ற உலர்ந்த உணவுப் பொருள்கள்

போன்றவற்றில் நச்சு ஊடுருவல் குறைவு.

நீர், உணவைச் சேமிக்கப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள், டப்பாக்கள், பாலிதீன் பைகள் போன்றவை உணவுத் தரம் (ச்ர்ர்க் வ்ன்ஹப்ண்ற்ஹ்) உள்ளவையா என்று தெரிந்து கொண்டுதான் பயன்படுத்த வேண்டும்.

பயணம் செய்யும்போது வாங்கும் மினரல் வாட்டர் பாட்டில்கள், ஜூஸ் பாட்டில்கள் போன்றவற்றை நாம் வீட்டுக்குக் கொண்டு வந்து உபயோகிக்கிறோம்.

காலி பாட்டிலை லேசாக அமுக்கிப் பார்ப்போம். நசுங்கினால் தூக்கிப் போட்டு விடுவோம். கெட்டியாக இருந்தால் அதைப் பாதுகாத்து மறுபடியும் பயன்படுத்துகிறோம்.

இந்த பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவதில் ஆபத்து இருக்கிறது. பாட்டிலை கவிழ்த்து அடியில் பார்த்தால் கீழ்க் கண்ட குறியீடுகள் இருக்கும். சில எண்கள், சில எழுத்துக்கள்.

இவற்றுக்கான விளக்கம்

1 பாலி எதிலீன் டெரிபாலேட் டஉபஉ

2. அடல் பாலிஎதிலீன் ஏஈடஉ

3. பிளாஸ்டிக் ஆக்கப்படாத பாலிவினைல் குளோரைடு டயஇ

4. அடர்த்தி குறைந்த பாலி எதிலீன் கஈடஉ

5. பாலிப் ரொபிலீன் டட

6. பாலிஸ்டெரின் அல்லது விரிவடையும் பாலிஸ்டெரின் டந

7. பாலி கார்போனேட் (டஇ ஹய்க் ர்ற்ட்ங்ழ்ள்)

பழச்சாறு, குடிநீர், மென்பான பாட்டில்கள் டஉபஉ - யால் தயாரிக்கப்படுகின்றன.

பால் பாட்டில், குடிநீர் பாட்டில் நீர் ஜக்கு போன்றவை ஏஈடஉ- யால் தயாரிக்கப்படுகின்றன.

குடிநீர் ஜக்கு, சமையல் எண்ணெய் ஆகியவை டயஇ யால் தயாரிக்கப்படுகின்றன.

யோகர்ட் எனப்படும் தயிர் சிரப் பாட்டில்கள் டட -யால் தயாரிக்கப்படுகின்றன.

சில வகை பிளாஸ்டிக் பொருள்களிலிருந்து நச்சுத்தன்மையும், வேதியியல் பொருள்களும் ஊடுருவி நமது குடிநீரில், பழச்சாறில் உணவில் கலந்துவிடும் ஆபத்து உள்ளது.

இவற்றில் கிட்டத்தட்ட எல்லாமே அதிகக் கெடுதல் செய்பவைதான்.

இந்தப் பொருள்கள் படிம நச்சுக்கள் போல் உடலில் ஆபத்தை விளைவிக்கின்றன. இந்த நச்சுக்களால் இதய நோய்கள், சர்க்கரை நோய், புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம்.

விலங்குகளிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில், இவை நாளமில்லா சுரப்பி பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆண்ள்ல்ப்ங்ய்ர்ப்-அ என்பது நெகிழி தயாரிக்க உதவும் வேதியியல் பொருள். பழச்சாறு பாட்டில்கள், குழந்தைகளுக்கான பால் பாட்டில்கள் தயாரிக்க இது பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை அல்லவா?

காரில் பிளாஸ்டிக் பாட்டிலில் குடிநீர் வைத்துப் பயன்படுத்தினால் காருக்குள் ஏற்படும் கதிரியக்கமும் சேர்ந்து மகளிருக்கு கருப்பை வாய் புற்று நோய் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

பிளாஸ்டிக் பாட்டில்கள்- டப்பாக்களில் குடிநீர், ஜூஸ், உணவுப் பொருள்களை அடைத்து வைப்பதைத் தவிர்க்க வேண்டும். பாட்டில்களின் அடியில் உள்ள எண்ணைக் கவனித்து அன்றாட வீட்டு உபயோகத்துக்கு பாலி எதிலீன் டெரிபாலேட், அடல் பாலிஎதிலீன், பாலிஸ்டெரின் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். பாலிகார்பனேட்- பிசி (7) வகை பிளாஸ்டிக்குகள் ஓரளவு பாதுகாப்பானவை.

 

ராமேஸ்வரத்தில் பாலித்தீன் பயன்படுத்த தடை அபராதம் எவ்வளவு?

Print PDF

தினகரன் 21.06.2010

ராமேஸ்வரத்தில் பாலித்தீன் பயன்படுத்த தடை அபராதம் எவ்வளவு?

"ராமேஸ்வரம் தீவுப்பகுதிகளில் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள், பொருட்கள் தயாரிப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு ரூ.750 முதல் ரூ.2 ஆயிரத்து 500 வரையும், பையும் & கையுமாக செல்லும் பொதுமக்களுக்கு ரூ.100ம் அபராதம் விதிக்கப்படும். தேவைப்படும் பட்சத்தில், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 188ன் கீழ் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்," என தாசில்தார் அறிவித்துள்ளார்.

ராமேஸ்வரம், ஜூன் 21: ராமேஸ்வரம் பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்தினால் அபராதம், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்கள் சுற்றுச்சூழல், சுகாதாரத்தைப் பெரிதும் பாதிக்கின்றன. இவற்றை தீயிட்டு எரிக்கும் போது கிளம்பும் நச்சுப்புகை, தொற்றுநோய்கள் பரவக் காரணமாக அமைகின்றது. முக்கியமாக, இவற்றை சாப்பிடும் வன விலங்குகள் பரிதாபமாக உயிரிழக்கின்றன.

நாடு முழுவதுமிருந்து சுற்றுலாப்பயணிகள், யாத்ரீகர்கள் வந்து செல்லும் ராமேஸ்வரம் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலை பாதிக்கின்றன. இங்குள்ள அக்னி தீர்த்தக் கடலில் பிளாஸ்டிக், பாலித்தீன் கழிவுகள் சர்வ சாதாரணமாக மிதந்து கொண்டிருப்பதைக் காணமுடியும். இதனால், கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, அங்கு பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது.

அரசின் இந்த அறிவிப்பு குறித்து ராமேஸ்வரம் தாசில்தார் ராஜேந்திரன் கூறியதாவது: ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் விட்டுச் செல்லும் பிளாஸ்டிக், பாலித்தீன் கழிவுகளால் சுற்றுச்சூழல், சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் அழியும் அபாயமும் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த கடந்த ஜனவரி மாதம் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்தத் தடையை அரசு உறுதிப்படுத்தி தற்போது, அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதன்படி, ராமேஸ்வரம் தீவுப்பகுதிகளில் இனி பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள் பயன்பாட்டுக்கு இனி முற்றிலுமாக தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறினால் ரூ.100 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதமும், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும். இந்தத் தடையை பொருள் உற்பத்தியாளர்கள், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள், பொதுமக்கள் அனைவரும் கடைபிடிக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராமேஸ்வரம் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சுப்ரமணியன், தாசில்தார் ராஜேந்திரன், நுகர்வோர் இயக்கத்தினர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தேவஸ்தான கேண்டீன் உள்ளிட்ட உணவு விடுதிகள், கடை களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களுக்கு, தடை குறித்த விதியை கூறி, இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

 


Page 87 of 135