Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

Print PDF

தினமணி 17.06.2010

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

பண்ருட்டி, ஜூன் 16: பண்ருட்டி நகராட்சி, பண்ருட்டி தாலுகா அனைத்து வியாபார சங்கங்களின் சம்மெüனம் மற்றும் அனைத்து பள்ளிகளும் இணைந்து நடத்திய பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

பண்ருட்டி நகரப் பகுதியின் சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதை தடை செய்வது தொடர்பான தீர்மானம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நகர மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் படி ஜூன் 16-ம் தேதி முதல் நகரப் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை (மறுசுழற்சிக்கு உதவாதவை) விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது எனவும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து புதன்கிழமை பிரம்மாண்டமான பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நகராட்சி வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் நகராட்சியை வந்தடைந்தது. பேரணியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நகர மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கி.கோதண்டபாணி முன்னிலை வகித்தார். பேரணியை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

பேரணியைத் தொடங்கி வைத்து நகராட்சி அலுவலகத்தில் இருந்த மாவட்ட ஆட்சியரிடம், திருவதிகையில் மண்ணெண்ணெய் பங்க் அமைக்க அமைச்சர் தெரிவித்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது, நூலகத்துக்கு சொந்த கட்டடம் கட்ட ரூ.1 கோடி ஒதுக்கியும் இடம் தேர்வு செய்யப்படவில்லை. ரயில்வே மேம்பாலம் அமைக்க மண் பரிசோதனை செய்ததுடன் சரி; மேற்கொண்டு நடவடிக்கை இல்லை, விழமங்கலத்தில் பூட்டிக் கிடக்கும் தாய்சேய் நல விடுதியில் பணியாளர் இல்லை, பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு தொந்தரவு, சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்காமையால் விபத்தால் உயிரிழப்பு, கெடில நதியில் குப்பை கொட்டுதல் சுற்றுச்சூழல் பாதிப்பு, செயல்படாத உழவர் சந்தை, கடலூர்-சித்தூர் சாலையில் பைபாஸ் வசதி, கள்ளச்சாராய விற்பனை, மணல் கடத்தல், பண்ருட்டியில் ஷேர் ஆட்டோ இயக்க வேண்டுதல் உள்ளிட்ட குறைகளை எம்எல்ஏ தி.வேல்முருகனும், செய்தியாளர்களும் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதில் அளித்த ஆட்சியர், உழவர் சந்தை குறித்த பிரச்னைக்கு நகராட்சியில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யும்படி வட்டாட்சியர் பி.பன்னீர்செல்வத்திடம் கூறினார். குப்பை கொட்ட இடம் தேர்வு செய்துள்ளனர். இடத்தை வாங்க மாவட்ட வருவாய் அலுவலர் விலை நிர்ணயித்துள்ளார். திருவதிகையில் மண்ணெண்ணெய் பங்க் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் உயர் அழுத்த மின் கம்பி செல்வதால் மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும் என ஆணையர் கே.உமாமகேஸ்வரி கூறியதற்கு நகராட்சி பூங்காவுக்கு ஓதுக்கப்பட்ட பகுதியில் இடம் ஒதுக்க ஆவண செய்யும்படியும், தொகுப்பு ஊதியத்தில் தாய்சேய் நல விடுதியில் பணியாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியர் பெ.சீதாராமன் கூறினார். தொடர்ந்து பண்ருட்டியில் அரசு பெண்கள் பள்ளி அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பண்ருட்டி வட்டாட்சியர் பி.பன்னீர்செல்வம், சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியர் மங்கலம், பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) வி.வடிவேலு, திருவள்ளுவர் மெட்ரிக் பள்ளி தாளாளர் ஆர்.சேரன், வியாபாரிகள் சங்க பொது செயலர் சி.ராஜேந்திரன், கவுன்சிலர்கள் பழனி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

கடற்கரை கிராமங்களில் பிளாஸ்டிக் துப்புரவு முகாம் அமைச்சர் சுரேஷ்ராஜன் துவக்கி வைத்தார்

Print PDF

தினகரன் 14.06.2010

கடற்கரை கிராமங்களில் பிளாஸ்டிக் துப்புரவு முகாம் அமைச்சர் சுரேஷ்ராஜன் துவக்கி வைத்தார்

நாகர்கோவில், ஜூன் 14: குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவு துப்புரவு முகாம்களை அமைச்சர் சுரேஷ்ராஜன் துவக்கி வைத்தார்.

குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு ஒழிப்பு நடவடிக்கைகள் முழு அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தை பிளாஸ் டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகம், உள் ளாட்சி அமைப்புகள் மேற் கொண்ட நடவடிக்கையி னால் பொதுமக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தி மறுசுழற்சிக்கு பயன்படுத்த இய லாத பிளாஸ்டிக் பொருட் கள் (பிளாஸ்டிக் பை, கேரி பேக்குகள்) பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்தகட்டமாக வரும் ஜூலை 1ம் தேதி முதல் குமரி மாவட்டத்தை குப்பைகள் இல்லாத, சுகாதாரமான மாவட்டமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளை சேர்ந்த குளச்சல் நகராட்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட 12 பேரூராட்சிகள், கோவளம் உள்ளிட்ட 12 ஊராட்சிகளில் கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவு பொருட் கள் மற்றும் பிற கழிவுகளை முழுமையாக அகற்றிட முழு துப்புரவு முகாம் நடந்தது.

அனைத்து கடற்கரை பகுதிகளிலும் நடந்த முழு துப்புரவு முகாம்களில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்கள், உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், பங்குதந்தையர்கள், சுய உதவிக்குழுவினர் பங்கேற்றனர். பிளாஸ்டிக் கழிவு முழு துப்புரவு முகாமை கோவளம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் சுற்றுலா மற்றும் பதிவுத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் ராஜேந்திர ரத்னூ, கோவளம் ஊராட்சி தலைவர் பெல்சிற்றாள், துணைத்தலைவர் புஷ்பராஜ், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சிவராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரகுபதி, ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக கோவளம் ஊராட்சியில் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்களிடம் இருந்து அமைச்சர் சுரேஷ்ராஜன், கலெக்டர் ராஜேந்திர ரத்னூ ஆகியோர் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது தூண்டில்வளைவு கட்டுதல், பேருந்து வசதி, விடுபட்டவர்களுக்கு கலர் டிவி வழங்குதல் போன்றவை தொடர்பாக பொதுமக்கள் அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சுரேஷ்ராஜன் உறுதியளித்தார்.

 

பிளாஸ்டிக் இல்லாத நகராக போடியை மாற்ற நடவடிக்கை

Print PDF

தினமணி 14.06.2010

பிளாஸ்டிக் இல்லாத நகராக போடியை மாற்ற நடவடிக்கை

போடி, ஜூன், 13: தமிழகத்தில் பிளாஸ்டிக் இல்லாத நகராக போடி நகராட்சியை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ஆணையர் க.சரவணக்குமார் தெரிவித்தார்.

போடி நகரில் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் போன்ற பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதற்கான விழிப்புணர்வு அனைத்துத் தரப்பு மக்களிடமும் ஏற்படுத்த நகராட்சி ஆணையர் தலைமையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆணையர் க.சரவணக்குமார் கூறியதாவது:

பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சுழலுக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து தினமணி நாளிதழிலும் விழிப்புணர்வுக் கட்டுரை வெளியிடப்பட்டது. நகரில் குப்பைகளுடன் அதிக அளவில் பிளாஸ்டிக் பொருள்கள் காணப்படுகிறது. இதனால் குப்பைகளை மக்கச் செய்து உரம் தயாரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது.

தமிழகத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத சுகாதாரமான நகரமாக போடி நகராட்சியை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக நகரில் உள்ள ஹோட்டல்களில் பிளாஸ்டிக் பை, டம்ளர்கள் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளது.

நகரில் 10 ஆயிரம் மாணவர்கள் மத்தியில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் தீமைகள் குறித்து நாடகம், கலை நிகழ்ச்சி மூலம் விளக்கப்பட்டு அவர்கள் தங்கள் பெற்றோர், உறவினர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி பள்ளி மாணவர்களின் பேரணி, மனிதச் சங்கிலி போன்றவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் குப்பைகளை வீட்டில் சேகரிக்கும்போது பிளாஸ்டிக் குப்பைகளை தனியாகச் சேகரித்து பின்னர் நகராட்சிப் பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

ஆட்சியர் தலைமையில் பிளாஸ்டிக் இல்லா நகராட்சியாக மாற்றுவதற்கான தொடக்க நிகழ்ச்சி விரைவில் நடத்தப்பட்டு, பிளாஸ்டிக் ஒழிப்பில் போடி நகராட்சி முன்மாதிரியாக மாற்றப்படும் என்றார்.

 


Page 88 of 135