Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

போடி நகராட்சியில் ஓட்டல்களில் பாலிதீன் பைகள் பயன்படுத்த தடை

Print PDF

தினகரன் 11.06.2010

போடி நகராட்சியில் ஓட்டல்களில் பாலிதீன் பைகள் பயன்படுத்த தடை

போடி, ஜூன் 11: ஓட்டல்கள், டீக்கடைகள், இறைச்சி கடைகளில் பாலிதீன் பைகளை பயன்படுத்த தடைவிதித்து போடி நகராட்சி தமிழகத்திற்கே முன்னுதாரணமாக சுற்றுச்சூழல் புரட்சியைதுவக்கியுள்ளது.

தேனி மாவட்டம் போடி நகராட்சி கமிஷனராக பொறுப்பேற்ற சரவணக்குமார் பாலிதீன் பைகளை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன்படி போடி பகுதியில் ஓட்டல்கள், டீக்கடைகளில் பாலிதீன் பைகளை பயன்படுத்த தடை விதித்து நகராட்சி கூட்டத்தில் 3 மாதம் முன்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதுதொடர்பாக கமிஷனர், வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள், டீக்கடைக்காரர்களிடம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படும் வகையில் ஓட்டல் உரிமையாளர்கள், டீக்கடைக்காரர்கள் இணைந்து நேற்றுமுன் தினம் கடையடைப்பும், விழிப்புணர்வு ஊர்வலமும் நடத்தினர்.

நேற்று காலை முதல் ஓட்டல்கள், டீக்கடைகளில் பாலிதீன் பைகள் பயன்பாடு முழுமையாக நிறுத்தப்பட்டது. போடி பகுதி இறைச்சி கடைகளிலும் இலைகளில் வைத்து இறைச்சி வழங்கப்பட்டது. தமிழகத்திற்கே முன்னுதாரணமாக சுற்றுச்சூழல் புரட்சி போடி நகராட்சியில் துவங்கியுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் கலைச்செல்வம் கூறுகையில், "பாலிதீன் ஒழிப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க முடிவு செய்துள்ளோம். நேற்று காலை பாத்திரம், துணிப்பை கொண்டு வந்தவர்களுக்கு மட்டுமே பார்சல்கள் வழங்கினோம்" என்றார்.

 

கூடலூர் பேரூராட்சியில் 10ஆயிரம் மரக்கன்று

Print PDF

தினமணி 10.06.2010

கூடலூர் பேரூராட்சியில் 10ஆயிரம் மரக்கன்று

பெ.நா.பாளையம், ஜூன் 9: கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள மக்கள் பங்களிப்புடன் கூடலூர் பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் பணி செவ்வாய்கிழமை துவங்கியது.

÷இப்பேரூராட்சியில் பல ஆண்டு காலமாக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த 10 ஏக்கர் அரசு நிலத்தை பேரூராட்சித் தலைவர் பாப்பண்ணன்,செயல் அலுவலர் கே.கல்யாணசுந்திரன் ஆகியோர் தீவிர நடவடிக்கை எடுத்து கையகப்படுத்தினர்.

இதில் தற்போது அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

÷இதனை செவ்வாய்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பாப்பண்ணன் துவக்கி வைத்தார். அப்போது உடனிருந்த செயல் அலுவலர் கல்யாணசுந்தரம் விரைவில் இம்மாநாட்டை முன்னிட்டு ரூ. 20 லட்சம் செலவில் வஞ்சிமா நகரில் உருவாக்கப்பட்டுள்ள மனமகிழ் பூங்கா திறக்கப்பட உள்ளது, என்றார். அரசு மருத்துவமனைக்கு

கூடுதல் வசதி கோரி அதிமுக ஆர்ப்பாட்டம் கோவை, ஜூன் 9: கோவை அரசு மருத்துவமனைக்கு கூடுதல் வசதிகள் செய்துதரக் கோரி அதிமுக சார்பில் வரும் சனிக்கிழமை (ஜூன் 12) ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

செஞ்சிலுவைச் சங்கக் கட்டடம் அருகே நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தேர்தல் பிரிவு செயலர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை வகிக்கிறார்.

மாநகர் மாவட்ட செயலர் செ..வேலுசாமி, புறநகர் மாவட்ட செயலர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

செம்மொழி மாநாடு என்ற பெயரில் மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய அறுவைச் சிகிச்சைப் பிரிவு, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தி கட்டடம் உள்ளிட்ட கூடுதல் வசதிகளைக் கொண்டு வரக் கோரியும், கோவை மாநகராட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது, என்று அதிமுக தெரிவித்துள்ளது.

 

எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு தண்ணீரை பாதுகாக்க வேண்டியது அவசியம்

Print PDF

தினமணி 09.06.2010

எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு தண்ணீரை பாதுகாக்க வேண்டியது அவசியம்

தூத்துக்குடி, ஜூன் 8: எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு தண்ணீரைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என, தூத்துக்குடியில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தினவிழாவில் வலியுறுத்தப்பட்டது.

இந்திய தொழில்கள் கூட்டமைப்பு சார்பில் உலக சுற்றுச்சூழல் தினவிழா, தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இவ்விழாவில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பெ. குபேந்திரன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு சுவரொட்டியை வெளியிட்டார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழகம் முழுவதும் திடக்கழிவு மேலாண்மை தொழில்நுட்பம் கடைப்பிடிக்கப்படுவதால், சுற்றுச்சூழல் மாசுவை வெகுவாக குறைக்க முடியும். சுற்றுச்சூழல் மேலாண்மைக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது என்றார் அவர்.

சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் எஸ். சாமூவேல் ஆசீர்ராஜ் பேசியதாவது:

எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு தண்ணீரை பாதுகாக்க அனைத்து வகையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். தண்ணீரை சேமிக்க ஒவ்வொரு பொதுமக்களும் முன்வர வேண்டும். தண்ணீர் ஆதாரங்களை பாதுகாக்க குடிநீர் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

தண்ணீர் வெப்பமடைவது அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் அதிகப்படியான வெப்பநிலையை உணருகின்றனர். பருவநிலை மாற்றத்தால் பணிக்கட்டிகள் உருகி வருகின்றன.

கணினி உதிரி பாகங்கள் போன்ற மின்னணு கழிவுப் பொருள்களை மறுசுழற்சி செய்யும் யுக்திகளை கண்டுபிடிக்க வேண்டும். காற்று மற்றும் ஒலி மாசுகளை கட்டுப்படுத்த வேண்டும். வாகனங்களில் இருந்து வரும் புகையை குறைக்க வேண்டும். இவைகளின் மூலம் சிறிதளவாவது வெப்பநிலையை குறைக்க முடியும் என்றார் அவர்.

 


Page 89 of 135