Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

50 மைக்ரானுக்கு குறைவான பாலிதீன் பைகளை பயன்படுத்தினால் தண்டனையுடன் ரூ.1 லட்சம் அபராதம் துணை ஆட்சியர்

Print PDF

தினகரன்   07.06.2010

50 மைக்ரானுக்கு குறைவான பாலிதீன் பைகளை பயன்படுத்தினால் தண்டனையுடன் ரூ.1 லட்சம் அபராதம் துணை ஆட்சியர்

புதுச்சேரி, ஜூன் 7: 50 மைக்ரானுக்கு குறைவான பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என புதுவை துணை மாவட்ட ஆட்சியர்(வருவாய்) சக்திவேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரியில் 50 மைக்ரான் மற்றும் 8க்கு 12 அளவுக்கு குறைவான பாலிதீன் அல்லது பிளாஸ்டிக் பைகள் மற்றும் தட்டுக்களை எந்த ஒரு தனி நபரோ, கடை வைத்திருப்பவரோ, மொத்தமாகவோ அல்லது சில்லரையாகவோ விற்பனை செய்வதோ, அல்லது வியாபாரத்திற்காக சேமித்து வைப்பதோ தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், உபயோகித்தபின் அப்புறப்படுத்தக்கூடிய 8க்கு 12 அளவுள்ள 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் கோப்பைகளை உபயோகப்படுத்தக்கூடாது என்று அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது.

மேலும் சுற்றுச்சூழல் துறை பலமுறை பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்கள் மற்றும் வியாபாரிகளை அணுகி 50 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அறிவுறுத்தலுக்கு பின்பும் சில வியாபாரிகளும், தனிநபர்களும், வணிக நிறுவனங்களும் மேற்சொன்ன தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதாக புகார்கள் வந்துள்ளன. எனவே 50 மைக்ரானுக்கு குறைவான பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

எனவே, பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் தனிநபர்களின் பாலிதீன் உபயோகத்தை கண்காணிக்க தனிப்படை ஒன்று வட்டாட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது 50 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் அவ்வாறு உபயோகிப்பவர்கள் தண்டனைக்கு உள்ளாவார்கள்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறை தண்டனை மற்றும் லட்ச ரூபாய்க்கும் மேல் அபராதம் விதிக்கக்கூடும்.

முதல்கட்டமாக புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இத்தடை அமல்படுத்தப்படுகிறது. அடுத்த கட்டமாக அனைத்து நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளுக்கும் கட்டாயமாக செயல்படுத்தப்படும் என்று சார்பு ஆட்சியரால் அறிவிக்கப்படுகிறது.

மேலும், சமூக நலனை கருதும் பொதுமக்கள் யாராவது ஏதாவது கடைகளில் 50 மைக்ரானுக்கு குறைவான பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பதையோ, உபயோகிப்பதையோ பார்த்தால் உடனே வட்டாட்சியர்களுக்கு புதுச்சேரி வட்டாட்சியர்& 9751308049, உழவர்கரை வட்டாட்சியர்& 9787407492, சார்பு ஆட்சியர்& 1077(இலவச சேவை) ஆகிய தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்க வேண் டும்.இவ் வாறு அதில் தெரிவித்துள்ளார்.

 

தடையை மீறி பயன்படுத்தப்பட்ட 294 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

Print PDF

தினகரன் 04.06.2010

தடையை மீறி பயன்படுத்தப்பட்ட 294 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

நாகர்கோவில், ஜூன் 4: குமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகளை எடுத்து சென்றாலே அவர்களுக்கு ரூ.100 அப ராதம் விதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு ரூ.1000 வரை அப ராதம் விதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியதற்காக மது பான பார், சூப்பர் மார்க்கெட் ஆகியவை நாகர்கோவிலில் சீல் வைக்கப்பட்டன.

உத்தரவு அமலுக்கு வந்து 2 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் மாவட்டத்தில் பல் வேறு இடங்களில் வழக்கம் போல் கேரி பேக்குகள் பயன் பாடு இருந்து வருவதாக குமரி மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூவுக்கு தகவல்கள் வந்தன. இது தொடர் பாக அண்மை யில் நாகர்கோவில், செட்டிக்குளத்தில் நடந்த ஆலோசனை கூட்டத் தில் கலெக்டர் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

இந்தநிலையில் குமரி மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு அதிரடி சோதனை நடத்தினர். ஓட்டல்கள், வணிக வளாகங்கள், பேக்கரி கள், மளிகை கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 94 குழுக்களை சேர்ந்த 227 அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். 3200 கடைகளில் சோதனை நடத்தப்பட்டத்தில் 157 கடைகளில் இருந்து 294.55 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக் குகள், டம்ளர்கள் பறி முதல் செய்யப்பட்டன. மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய குற்றத்திற்காக ரூ.14 ஆயிரத்து 550 அபராத மும் விதிக்கப்பட்டது. நாகர்கோவில் பகுதியில் மட்டும் 350 கடைகளில் சோதனை நடத்தப்பட்டதில் 18 கடை களில் இருந்து 41.4 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

பிளாஸ்டிக் பைகள் உபயோகம் 157 கடைக்காரர்களுக்கு ரூ. 14,550 அபராதம்

Print PDF

தினமணி 04.06.2010

பிளாஸ்டிக் பைகள் உபயோகம் 157 கடைக்காரர்களுக்கு ரூ. 14,550 அபராதம்

நாகர்கோவில், ஜூன் 3: கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் கேரி பைகள் மற்றும் கப்புகளை பயன்படுத்தியதாக 157 கடைக்காரர்களுக்கு ரூ. 14,550 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் 20 மைக்ரானுக்கும் குறைவான தடிமனுள்ள கேரி பைகள் மற்றும் கப்புகளின் உபயோகத்துக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில கடைகளில் இந்த பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதாக வந்த தகவலை அடுத்து கடைகளில் திடீர் சோதனை நடத்த ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ உத்தரவிட்டார்.

இந்த சோதனையை மேற்கொள்ள 227 அலுவலர்களை உள்ளடக்கிய 94 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. இக் குழுவினர் மாவட்டம் முழுவதும் 3200-க்கும் மேற்பட்ட கடைகளில் புதன்கிழமை சோதனை நடத்தினர்.

அப்போது 157 கடைகளில் இருந்து 294.55 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கேரி பைகள் மற்றும் கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்காக இந்த கடைக்காரர்களுக்கு ரூ. 14,550 அபராதம் விதிக்கப்பட்டது.

நாகர்கோவிலில் மட்டும் 350 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 18 கடைகளில் இருந்து 41.43 கிலோ பிளாஸ்டிக் பைகளும், கப்புகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனிடையே மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் ஒழிப்பு விவகாரத்தில் ஒத்துழைப்பு அளிக்கும் பொதுமக்கள் மற்றும் 95 சதவிகித வர்த்தகர்கள், வியாபாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாக ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார்.

 


Page 90 of 135