Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் மாற்றுப் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும்

Print PDF

தினமணி 01.04.2010

பிளாஸ்டிக் மாற்றுப் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும்

புதுச்சேரி, மார்ச் 31: புதுச்சேரியில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள லையில் அதற்கான மாற்றுப் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று திமுக எம்.எல்.. விஎம்சி சிவக்குமார் கூறினார்.

÷சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசியது:

÷புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 4 பிராந்தியங்களுக்கும் நிதியைச் சமமாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும். ஏரிகளைச் சுற்றி அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டு காடுகள் வளர்க்க வேண்டும்.

÷காரைக்காலில் உள்ள எரிவாயு மின் உற்பத்தி நிலையத்துக்கு இப்போது போதிய அளவில் எரிவாயு கிடைக்கவில்லை. புதுச்சேரி அரசு இதில் தலையிட்டு பெற்றுக் கொடுக்க வேண்டும். மேலும் மின்சார கார்ப்பரேஷன் லாபம் ஈட்டும் நிறுவனமாக இருக்கிறது. அதில் பணியாற்றும் தொழிலாளர்கள், அதிகாரிகளின் பிரச்னைகளைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

÷புதுச்சேரிக்கு இடம் பெயர்ந்த தலித் மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் உரிய சலுகை கொடுக்காவிட்டாலும் நலத் திட்டங்களில் கொடுக்க வேண்டும். காவல் நிலையங்களைச் சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றார் வி.எம்.சி. சிவக்குமார்.

 

விதிமீறிய கட்டடங்கள் இடிப்பு செலவு ரூ.6.72 கோடி: நகர மன்ற ஒப்புதலுக்கு தீர்மானம்

Print PDF

தினமலர் 31.03.2010

விதிமீறிய கட்டடங்கள் இடிப்பு செலவு ரூ.6.72 கோடி: நகர மன்ற ஒப்புதலுக்கு தீர்மானம்

ஊட்டி : ஊட்டியில் விதிகளை மீறி கட்டப்பட்ட 1319 கட்டடங்களை இடிக்க தேவைப்படும் தொகை குறித்த முக்கிய தீர்மானத்தின் முடிவு இன்று எடுக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பெருகும் கட்டடங்களை கட்டுப்படுத்தவும், 1993ம் ஆண்டு மாநில அரசால் 'மாஸ்டர் பிளான்' சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, மாவட்டத்தில் கட்டப்படும் கட்டடங்கள், சில விதிமுறையின் கீழ் தான் கட்ட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது; உத்தரவு முறையாக பின்பற்றாததால், விதிமீறிய கட்டடங்கள் பெருகின. நீலகிரி மாவட்டத்தில் பெருகும் கட்டடங்களை கட்டுப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில், வக்கீல் யானை ராஜேந்திரன் பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீலகிரி மாவட்டத்தில் அனுமதியின்றியும், விதிமீறியும் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டனர்.

ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1,337 கட்டடங்களை, முதற்கட்டமாக இடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதில், சில கட்டடங்கள் இடிக்கப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் அப்பணிகள் நிறுத்தப்பட்டன. மீதமுள்ள கட்டடங்களை இடிக்க தேவையான நிதி நகராட்சியில் இல்லாத காரணத்தால் அப்பணி நிறுத்தப்பட்டதாக, நகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இடிப்பு செலவின தீர்மானம்: ஊட்டி நகராட்சியில் இன்று நடக்கும் மாதாந்திர கூட்டத்தில், கட்டடம் இடிப்பு தொடர்பான தீர்மானம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 'ஊட்டி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனுமதியற்ற கட்டடங்கள் சம்மந்தமாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இதில், '2008ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி மற்றும் பிப்ரவரி 19ம் தேதிகளில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி 1337 கட்டடங்கள் இடிக்க வேண்டும்,' என உத்தரவிடப்பட்டது. 1993ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையிலான இந்த கட்டடங்களில் 1319 கட்டடங்கள் இடிமானம் செய்ய 6.72 கோடி ரூபாய் உத்தேச செலவினம் ஏற்படும்; இந்த செலவு தொகையை, நகராட்சி பொது நிதியில் இருந்து செலவு செய்ய இயலாது; இந்த தொகையை சிறப்பு நிதியாக ஒதுக்கீடு செய்ய சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி ஊட்டி நகராட்சியின் சார்பில் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதியன்று நீலகிரி மாவட்ட கலெக்டரால், சென்னை உயர்நீதிமன்றத்தில் 'ஸ்டேட்ஸ்' அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதில், கட்டடங்கள் இடிமானம் செய்ய 6.72 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இத்தொகையை ஊட்டி நகராட்சிக்கு ஒதுக்கீடு செய்வது குறித்து நான்கு வார காலத்திற்குள் அரசு பரிசீலனை செய்து தக்க முடிவு எடுக்க வேண்டும்; இந்த நிதியை ஒதுக்கீடு செய்ய ஊட்டி நகரமன்றம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இத்தீர்மானம் மன்ற அனுமதிக்கு வைக்கப்படுகிறது,' என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டட பிரச்னை தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் இந்த தீர்மானம் குறித்த முக்கிய விவாதம் இன்றைய நகர மன்ற கூட்டத்தில் நடக்கிறது.

Last Updated on Wednesday, 31 March 2010 06:30
 

பிளாஸ்டிக் மீதான தடை விரைவில் விரிவாக்கம் : நகராட்சிகளில் முதற்கட்ட அமல்

Print PDF

தினமலர் 31.03.2010

பிளாஸ்டிக் மீதான தடை விரைவில் விரிவாக்கம் : நகராட்சிகளில் முதற்கட்ட அமல்

ராமநாதபுரம்:ராமேஸ்வரத்தை தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தீவு பகுதியான ராமேஸ் வரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிக அளவில் இருந்தது. இதனால் இயற்கை சார்ந்த பல்வேறு அபாயம் ஏற்படும் சூழல் உருவானது. இதை தடுக்கும் விதமாக பிளாஸ்டிக் மீது தடை விதித்த போதும், அது பெயரளவில் நடைமுறையில் இருந்தது. இது குறித்து 'தினமலர்' தொடர்ந்து செய்தியின் வாயிலாக சுட்டிகாட்டி வந்தது. இதை யடுத்து, ராமேஸ்வரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகப்படுத்தியது.இதன் விளைவாக இன்று ராமேஸ்வரத்தில் 75 சதவீதம் பிளாஸ்டிக் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து இதை அதிகாரிகள் கண்காணித்தும் வருகின்றனர்.

இந்நிலையில், பிளாஸ்டிக் மீதான தடையை மாவட்டம் முழுவதும் விரிவாக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன் படி முதற்கட்டமாக நகராட்சிகளில் இத் திட்டத்தை கொண்டு வர உள்ளது. இதன் மூலம் கடைகள், ஓட்டல்கள், சிறு வியாபாரி களிடத்தில் புழக்கத்தில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறைய வாய்ப்புள் ளது. மீறி பயன்படுத்தப்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது.

கலெக்டர்(பொறுப்பு) பாலசுப்பிரமணியன் கூறியதாவது: பிளாஸ்டிக்ஒழிப்பில் ராமேஸ்வரம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இதை மேலும் விரிவாக்கம் செய்ய உள்ளோம். இதற்காக, நான்கு நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. திட்டம் அமலுக்கு வரும் போது, பிளாஸ்டிக் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

இது போன்ற திட்டத்தை தாமதப்படுத்தாமல் உடனடியாக அமல்படுத்தி, மாவட்டத்தில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன் பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

Last Updated on Wednesday, 31 March 2010 06:24
 


Page 103 of 135