Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்படுமா?

Print PDF

தினமணி 10.03.2010

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்படுமா?

போடி, மார்ச் 9: போடியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

போடி நகராட்சியின் 33 வார்டுகளில் 85 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். பொதுமக்கள் கடைகளில் பொருள்கள் வாங்கும் போது பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துகின்றனர். இதேபோல் டீக்கடைகள், ஹோட்டல்கள், மளிகைக் கடைகளில் ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் வாழை இலைகள், டம்ளர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றை பயன்படுத்திய பின் பொதுமக்கள் குப்பைகளில் இவற்றை போடுகின்றனர். இதனால் குப்பைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் கலந்து குப்பைகள் மக்காமல் போகின்றன. நகர் பகுதியில் எங்கு பார்த்தாலும் குப்பைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் தேங்குகின்றன. இவற்றில் தண்ணீர் தேங்கும்போது கொசுக்கள் உற்பத்தியும் அதிகமாகி நோய் பரவ காரணமாகிறது.

மேலும் போடி நகரில் செல்லும் பெரிய சாக்கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் தேங்கி கழிவுநீர் செல்ல முடியாமல் துர்நாற்றம் வீசுகிறது. இவற்றினாலும் நோய் பரவும் ஆபத்து ஏற்படுகிறது. அத்துடன் போடி நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை, உரம் தயாரிக்கும் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லும்போது, அதிக அளவு பிளாஸ்டிக் பொருள்கள் கலந்துள்ளதால் உரம் தயாரிக்க முடியாத நிலையில், அதிக அளவில் குப்பைகள் தேங்கி சுற்றுச்சூழல் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது குப்பைக் கிடங்கு செயல்பட்டு வரும் சுடுகாடு செல்லும் ரோட்டில் பிளாஸ்டிக் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளன. இவற்றை சிலர் தீ வைத்து விடுவதால் கரியமில வாயு பரவி, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

இதுகுறித்து போடி நகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் கூறியது:

போடி நகராட்சிப் பகுதியில் குப்பை தேங்காமலிருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறிப்பாக பிளாஸ்டிக் குப்பைகள் தேங்காமலிருக்க சிவப்பு, பச்சை நிற குப்பை சேகரிப்பு தொட்டிகளைப் பயன்படுத்த உள்ளோம். இவற்றில் மக்கும் குப்பைகளான காய்கறிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை பச்சை நிறத் தொட்டியிலும், பிளாஸ்டிக் பொருள்கள் போன்ற மக்காத குப்பைகளை சிவப்பு நிறத் தொட்டியிலும் போட வேண்டும்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த தடை விதிக்க நகர்மன்றத்தில் தீர்மானம் இயற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் கடைகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை பொதுமக்களுக்கு வழங்காமலிருக்கவும், கடைக்காரர்கள் பயன்படுத்தாமலிருக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

போடி வர்த்தகர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தியதில் அவர்களும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த தடை விதிக்க ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். இதன் மூலம் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

பொதுமக்களும் கடைகளுக்கு செல்லும் போது வீட்டிலிருந்து துணிப் பைகளை எடுத்து சென்று பொருள்களை வாங்க வேண்டும். பிளாஸ்டிக் டம்ளர்கள், பைகளுக்கு பதில் காகிதப் பைகள், டம்ளர்களைப் பயன்படுத்தி, போடி நகரம் சுகாதார நகரமாக மாற ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

Last Updated on Wednesday, 10 March 2010 09:06
 

சுற்றுலா, வழிபாட்டுத் தலங்களில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை

Print PDF

தினமணி 08.03.2010

சுற்றுலா, வழிபாட்டுத் தலங்களில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை

திருவாரூர், மார்ச் 7: திருவாரூர் மாவட்டத்தில் பொது இடங்கள், வழிபாட்டுத் தலங்களில் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன்.

பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியது:

பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நமது அன்றாடச் செயல்பாடுகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் சேர்கின்றன. குறிப்பாக பிளாஸ்டிக் கப்புகள், பைகள், மேஜை விரிப்புகள் உள்ளிட்ட மறு சுழற்சி முறையில் பயன்படுத்த இயலாத பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது.

பிளாஸ்டிக் பொருள்களால் கால்நடைகள் மற்றும் விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், இப் பொருள்களை எரிப்பதால் உண்டாகும் புகையால் சுவாசக் கோளாறு மற்றும் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

திருவாரூர் மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுற்றுலாத் தளங்களில் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது. இதுகுறித்து அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மார்ச் 11-ம் தேதி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கூட்டமும், மார்ச் 18-ம் தேதியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியும் நடத்தப்படும். மார்ச் 25-ம் தேதி அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தீர்மானம் முன்மொழிவும் நிறைவேற்றப்படும்.

மேலும் 40 மைக்ரான் தடிமனுக்குக் குறைவாக உள்ள

பிளாஸ்டிக் பொருள்களை ஏப்.1-ம் தேதி முதல் விற்பனை செய்யக் கூடாது. இதுகுறித்து நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பொது சுகாதாரத்துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர்கள் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டு, தவறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

எனவே, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வணிகர்கள், அனைத்துக் கடைக்காரர்கள், வியாபாரிகள், பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்ய வேண்டாம். பொது மக்களும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

கூட்டத்தில் அனைத்து நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Last Updated on Monday, 08 March 2010 11:12
 

பிளாஸ்டிக் கப்,பைகள் பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை: திண்டுக்கல் நகராட்சி முடிவு

Print PDF

தினமலர் 06.03.2010

பிளாஸ்டிக் கப்,பைகள் பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை: திண்டுக்கல் நகராட்சி முடிவு

திண்டுக்கல்:திண்டுக்கல் நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் கப், பைகளை பயன் படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.திண்டுக்கல் நகராட்சி கூட்டம் தலைவர் நடராஜன் தலைமையில் நடந்தது.

நடந்த விவாதம் வருமாறு:

துணை தலைவர் கல்யாணசுந்தரம்: சொந்த கட்டடங்களில் சிறுதொழில் நடத்துபவர்கள் மீது வரி விதிக்கும் போது, தொழில் பாதிக்கும் வாய்ப்புள்ளது.

தலைவர்: இதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. சென்னை நகராட்சி இயக்குனரின் உத்தரவுப்படி சொத்து வரி நிர்ணயம் செய்யப்படும்.

ஜெயபாலன்: அரசு பணிமனையில் பழுதுபட்ட வாகனங்களை செப் பனிட வெவ்வேறு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அரசு நிர்ணயித்த தொகை என்ன.

தலைவர்: அரசு உத்தரவுப்படி வாகனங்கள் பராமரிக்கப்படுகிறது.

துணை தலைவர்: குப்பை தொட் டிகள் நகராட்சியில் பற்றாக்குறை உள்ளது. இந்நிலையில் 39 தொட்டிகளுக்கு 25 தொட்டிகள் மராமத்துக்கு எடுத்து சென்றால், மக்கள் எங்கே குப்பை கொட்டுவார்கள். சுகாதாரக்கேடு ஏற்படும்.

தலைவர்: குப்பை தொட்டிகளை அதே இடத்தில் வைத்து மராமத்து செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

துணை தலைவர்: பாலதிருப்பதி சத்துணவு கூடத்தில் ஆரம்ப பள்ளியும் செயல்படுவதால் இட நெருக் கடி ஏற்பட்டுள்ளது. ஆர்.எம்., காலனி பகுதி இரண்டுக்கு இன்னும் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை.

தலைவர்: நிதி ஒதுக்கீடு வந்தவுடன் சத்துணவுகூடம் மராமத்து செய்யப்படும்.

கோபாலகிருஷ்ணன்: ஆத்தூர் அணையில் உள்ள கிணறுகளில் சகதிகள் அகற்றி அனைத்து பகுதிக்கும் குடிநீர் சப்ளை செய்ய வேண்டும்.

தலைவர்: ஆத்தூர் அணையில் உள்ள கிணறுகளில் சகதி அகற்றப் பட்டு, தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். பேரணை திட்டத்தின் மூலம் விரைவில் குடிநீர் சப்ளை தொடங்கும்.

ஜெயபாலன்: நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் கப்,கேரி பேக்குகளுக்கு தடை விதிக்க வேண்டும். அப்படி விதிக்கும் போது தொழிலாளர்களுக்கு சிறிது காலம் அவகாசம் தர வேண்டும்.தலைவர்: பிளாஸ்டிக் கப்பில் சூடான பானங்கள் குடிக்கும் போது நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. வரும் 15 நாட்களுக்குள் நகராட்சி பகுதிக்குள் யாரும் பிளாஸ்டிக் பொருட் களை பயன்படுத்தக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக் கப்படும். தலைவரின் இந்த தீர்மானத்திற்கு அனைத்து கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

Last Updated on Saturday, 06 March 2010 10:04
 


Page 107 of 135