Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிற மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு பணி: சுற்றுச்சூழல் அமைச்சர் மைதீன்கான் தகவல்

Print PDF

தினமலர் 15.02.2010

பிற மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு பணி: சுற்றுச்சூழல் அமைச்சர் மைதீன்கான் தகவல்

திருநெல்வேலி:பிற மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு பணி செயல்படுத்தப்படும் என நெல்லை மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகளின் கல்விச் சுற்றுலா நிகழ்ச்சி துவக்க விழாவில் சுற்றுச் சூழல் அமைச்சர் மைதீன்கான் பேசினார்.பள்ளி மாணவ, மாணவிகளிடையே மரம் வளர்ப்பு, காடு வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட பள்ளிகளில் பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றத்தில் அங்கம் வகிக்கும் மாணவ, மாணவிகள் இந்த சுற்றுலா முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். நெல்லை, சேரன்மகாதேவி, தென்காசி கல்வி மாவட்டங்களை சேர்ந்த 300 மாணவ, மாணவிகள் குற்றாலம், கண்ணுப்புளிமேடு, தென்மலை, ஆழ்வார்குறிச்சி சுற்றுச்சூழல் அறிவியல் மையம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஒரு கல்வி மாவட்டத்திற்கு 2 பஸ்கள் வீதம் 6 பஸ்களில் மாணவ, மாணவிகள் நேற்று சுற்றுலா புறப்பட்டனர். 22 ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டியாக சென்றனர்.

நெல்லை டவுன் சாப்டர் பள்ளியில் சுற்றுலா முகாம் துவக்க விழா நடந்தது. அமைச்சர் மைதீன்கான் தலைமை வகித்து பேசுகையில், "மாணவர்கள் தான் வருங்காலத்தை நடத்தக் கூடிய சக்தி. நோய் வராமல் இருக்க பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது போல் எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க இன்று மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக இதுபோன்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு துவங்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் உபயோகிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் உபயோகத்தை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லையில் பிளாஸ்டிக் ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் ஒழிப்பு பணி மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும். மறுசுழற்சிக்கு தகுதியில்லாத பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க கூடாது. சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றார்'.நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் சசிகலா வரவேற்றார். நெல்லை எம்.பி., ராமசுப்பு, எம்.எல்.., மாலைராஜா, துணைமேயர் முத்துராமலிங்கம், சேர்மன் சுப்பிரமணியன், ஆசிரியர்கள் விஜயலெட்சுமி, செல்வின் சாமுவேல், ஜோசப், கணபதிசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரபாபு நன்றி கூறினார

Last Updated on Monday, 15 February 2010 06:35
 

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருவாக்கத் திட்டம்

Print PDF

தினமணி 12.02.2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருவாக்கத் திட்டம்

கோவை, பிப்.11: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டி கோவையை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் கூறினார்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கோவை கோஇண்டியா அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியது:

தமிழகத்தில் சுமார் 1,000 வார்ப்படத் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் 700 தொழிற்சாலைகள் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ளன. இவற்றில் 70 சதவீத ஆலைகள் குப்போலோ முறையிலும், 30 சதவீத ஆலைகள் இன்டக்ஸன் முறையிலும் உலைகளைக் கொண்டுள்ளன.

கோவையில் சுமார் 150 வார்ப்படத் தொழிற்சாலைகள் குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதியில் இயங்கி வந்தன. இதில் 92 தொழிற்சாலைகள், சிறப்புத் தொழில் மற்றும் அபாயகரமான நில வகைப்பாட்டிற்கு மறுவகைப்படுத்த ஆணை வெளியிடப்பட்டது.

இவற்றில் 40 ஆலைகளை வேறு இடத்துக்கு மாற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இத் தொழிற்சாலைகளுக்கு இடம் வழங்க அரசூர், குன்னத்தூர் கிராமங்களில் தொழில் வளாகத் திட்டம் 2008}ல் துவக்கப்பட்டது.

இவற்றில் இதுவரை 46 வார்ப்படத் தொழிற்சாலைகள் அமைக்க இசைவு ஆணையை மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழங்கியுள்ளது. குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளில் உரிய கட்டுப்பாடு சாதனங்கள் இல்லாமல் இயங்கி வந்த 23 வார்ப்படத் தொழிற்சாலைகளுக்கு மூடுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளன.

மின்முலாம் தொழிற்சாலைகளில் அபாயகரமான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால், அதிலிருந்து வெளியேறும் கழிவுகளும் அபாயகரமானதாக கருதப்படுகிறது. எனவே, இத் தொழிற்சாலைகளில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

வெளியேறும் கழிவுகளை குறைக்கும் செய்முறைகளைப் பின்பற்றவும், எதிர் சவ்வூடு முறை சுத்திகரிப்பு மூலம் கழிவுநீரை மறுசுழற்சி செய்யவும், சுத்திகரிப்பு முறையின் இறுதி வெளியேற்றத்துக்காக ஆவியாக்குதல் முறையை பின்பற்றவும் இத் தொழிற்சாலைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாசு இல்லாத நகரமாக இருந்தால் தான் மக்கள் சுகாதாரமாக வாழ முடியும். எனவே, தொழிற்சாலைகள் மாசுவை குறைக்கும் வகையில் புதிய தொழில்நுட்பங்களுக்கு மாற வேண்டும். கோவையில் ஜூன் இறுதியில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறவுள்ளது.

எனவே, கோவையை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாடு வாரியம், மாவட்ட நிர்வாகம் இணைந்து இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார். ஊரகத் தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பாலகிருஷ்ணன், உறுப்பினர் செயலர் இரா.ராமச்சந்திரன், தொழில் வணிக இயக்குநர் ஜி.சுந்தரமூர்த்தி, ஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயலர் அலுவலர் டி.சபீதா, மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத் உள்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 12 February 2010 10:29
 

புதிய விதிமுறைகளை அமல்படுத்த கால அவகாசம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

Print PDF

தினமலர் 12.02.2010

புதிய விதிமுறைகளை அமல்படுத்த கால அவகாசம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

கோவை:""மத்திய சுற்றுப்புறச் சூழல் விதிமுறைகள் மற்றும் புதிய கட்டுப்பாடுகளை, தொழிற்சாலைகளில் அமல்படுத்த போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது,'' என்று தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பாலகிருஷ்ணன் கூறினார்:நேற்று கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:

தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளில் காற்று, நீர் ஆகியவை மாசுபடுகிறது. இவை இரண்டின் வாயிலாக சுற்றுப்புறம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. சுற்றுப்புறச் சூழலை கட்டுப்படுத்த, மத்திய அரசு இந்த புதிய உத்தரவை கடந்த நவம்பரில் வெளியிட்டுள்ளது. இவற்றை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு, தமிழக அரசு தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.

மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் தொழிற்சாலைகள் அமல்படுத்த காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.கோவையில் குடியிருப்பு பகுதியில் இயங்கிய 65 சிறு மின்முலாம் பூச்சு தொழிற்சாலைகள் மாற்றம் செய்யப்பட்டு, சர்க்கார் சாமக்குளம் பகுதியில் 8.4 ஏக்கர் பரப்பளவில் மின்முலாம் பூச்சு தொழிற்சாலை பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு 56 மின்முலாம் பூச்சு தொழிற்சாலைகள் அமைய உள்ளன.

இதே போல சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, பி கரிசல்குளம் பகுதியில் 8.4 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, மின்முலாம் பூச்சு தொழிற்சாலைகளுக்காக தொழில் பூங்கா அமைக்கப்படுகிறது. இங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை வசதிகளும் அமைக்கப்படுகிறது. இங்கு 48 குறு, 16 நடுத்தர, 16 பெரிய தொழிற்சாலைகள் அமைக்கப்படுகிறது. இவையனைத்தும் குடியிருப்பு பகுதியில் இயங்கி வந்த தொழிற்சாலைகளாகும்.

கோவையில் மறு சுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் பொருட்களை ஆயிரத்து 400 பாரன்ஹீட் வெப்பம் ஏற்படுத்தி அழிப்பதற்கு, .சி.சி., நிறுவனத்துடன் விரைவில் ஒப்பந்தம் செய்யப்போகிறோம். இந்நிறுவனம் ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் இப்பணி மேற்கொண்டு சிறப்பாக செயல்படுத்தியுள்ளது.நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இத்திட்டத்தை சென்னையிலுள்ள சிமெண்ட் கம்பெனி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது, என்றார் பாலகிருஷ்ணன்.

 


Page 113 of 135