Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் இல்லாத கோவையை உருவாக்க தொழிலதிபர்கள் முன்வர வேண்டும் சுற்றுப்புறச்சூழல் துறை அமைச்சர் வேண்டுகோள்

Print PDF

தினமலர் 12.02.2010

பிளாஸ்டிக் இல்லாத கோவையை உருவாக்க தொழிலதிபர்கள் முன்வர வேண்டும் சுற்றுப்புறச்சூழல் துறை அமைச்சர் வேண்டுகோள்

கோவை : "பிளாஸ்டிக், பாலிதீன் இல்லாத கோவையை உருவாக்க தொழிலதிபர்கள் முன்வரவேண்டும்' என்று தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மொய்தீன் கான் பேசினார். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வார்ப்பட்டரை மற்றும் மின்முலாம் தொழிலகங்களில் சுற்றுச்சூழல் பேணுதல் குறித்த கருத்தரங்கம் கோவையில் நடந்தது. இதில் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மொய்தீன் கான் பேசியதாவது:

தமிழகத்தில் ஆயிரம் வார்ப்பட (பவுன்டரி) தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 700 தொழிற்சாலைகள் கோவை மற்றும் திருப்பூரில் உள்ளன. இதில் பெரும்பான்மையாக சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளே அதிகமாக உள்ளன. இதில் 70 சதவீதம் குப்போலோ வகை உலைகளும், 30 சதவீதம் மின்சாரத்தால் இயங்கும் இன்டக்சன் வகை உலைகளும் பயன்படுத்துகின்றனர். உலைகளிலிருந்து வெளியேறும் வாயுக்கழிவுகளை கட்டுப்படுத்த, ஈரவகை உறிஞ்சும் அமைப்புகளை பெரும்பாலான வார்ப்பட தொழிற்சாலைகள் நிறுவியுள்ளன.

இதன் செயல்திறனும் இயக்கமுறைகளையும், மேம்படுத்த வேண்டும். கோவையில் 150 வார்பட தொழிற்சாலைகள் குடியிருப்பு மற்றும் வணிகப்பகுதியில் இயங்கி வந்தன. இதில் 92 தொழிற்சாலைகள், சிறப்பு தொழில் மற்றும் அபாயகரமான நில வகைப்பாட்டிற்கு மறு வகைப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மின் தொழிற்சாலைகளில் ரசாயனங்கள் பயன்படுத்துவதால் அதிலிருந்து வெளியேறும் கழிவுகள் அபாயகரமானதாக உள்ளது. இதை தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்தி வருகிறது.

மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை அழிப்பதற்கு சென்னையிலுள்ள சிமென்ட் நிறுவனத்துடன் பேசி புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இத்தொழில் நுட்பம் கோவையில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். செம்மொழி மாநாட்டையொட்டி, பிளாஸ்டிக், பாலிதீன் இல்லாத கோவை உருவாக்கப்படும். அதற்கு கோவையிலுள்ள தொழிலதிபர்கள் முன்வரவேண்டும். இவ்வாறு, அமைச்சர் பேசினார்.

தமிழக அமைச்சர் பழனிசாமி, கலெக்டர் உமாநாத், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ராமச்சந்திரன், தமிழக தொழிற்சாலைத்துறை இயக்குனர் சுந்தரமூர்த்தி, ஜி..எஸ்., நிறுவன முதன்மை அலுவலர் சபிதா, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 12 February 2010 06:45
 

மரங்களை பாதுகாக்க ஆம்புலன்ஸ்: டில்லி மாநகராட்சி கலக்கல் திட்டம்

Print PDF

தினமலர் 12.02.2010

மரங்களை பாதுகாக்க ஆம்புலன்ஸ்: டில்லி மாநகராட்சி கலக்கல் திட்டம்

புதுடில்லி : தலைநகர் டில்லியை பசுமை மயமாக்கும் முயற்சியை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. நகரில் உள்ள மரங்களை பேணி பாதுகாப்பதற்கு வசதியாக ஆம்புலன்ஸ் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

அதிவேகமாக உலகம் வெப்பமயமாகி வருகிறது. இதனால், காலம் தவறி மழை பெய்வது, கடல் நீர் மட்டம் அதிகரிப்பது போன்ற பல்வேறு இயற்கை பிரச்னைகள் உருவாகின்றன. மரங்கள் வெட்டப்படுவது, உலகம் வெப்பமயமாவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதனால், சர்வதேச நாடுகள் அனைத்தும் தங்களால் முடிந்த அளவுக்கு மரங்களை வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. தலைநகர் டில்லி, ஒரு காலத் தில் அடர்ந்து வளர்ந்த மரங்களோடு, பச்சை பசேலென பசுமையாக காட்சி அளித்தது. தற் போது, ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு விட்டன. எங்கு பார்த்தாலும் ஒரே கான்கிரீட் மயம் தான். இதனால், ஏற்படும் பிரச்னைகளை நன்கு உணர்ந்துள்ள டில்லி மாநகராட்சி அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளது. தற்போது இருக்கும் மரங்களையாவது பாதுகாக்க வேண் டும் என்ற ஆதங்கத்துடன், புதிதாக ஆம்புலன்ஸ் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

பச்சை நிறம் கொண்ட ஆம்புலன்ஸ் ஒன்று, டில்லி மாநகராட்சியில் தயார் நிலையில் உள்ளது. இதில், இரண்டு தண்ணீர் டாங்குகள், சோப்பு நுரை, ஸ்பிரேயர் உள்ளிட்டவை உள்ளன. வறட்சியால் மரங்கள் காய்ந்த நிலையில் இருந்தாலோ, இலைகள் உதிர்ந்த நிலையில் இருந்தாலோ, அல்லது சாயும் நிலையில் இருந்தாலோ இதுகுறித்து உடனடியாக, பொதுமக்கள் மாநகராட்சிக்கு தகவல் கொடுக்கலாம். உடனடியாக சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வந்து விடும். அதில் இருக்கும் மாநகராட்சி ஊழியர்கள், மரத்துக்கு என்ன பாதிப்பு உள்ளதோ, அதை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுப்பர். சில மரங்கள், மிகவும் அழுக்கடைந்த நிலையில் இருந்தால், சோப்பு நுரை கொண்டு, ஸ்பிரேயர் உதவியுடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து, அவற்றை கழுவுவர். இதற்காக, 60க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்களுக்கு கைதேர்ந்த நிபுணர்களைக் கொண்டு, தோட்டக் கலை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் ஆம்புலன்ஸ்களின் எண்ணிக் கையை அதிகரிப்பதற்கும், மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. டில்லி மாநகராட்சியின் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைகளை சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.

Last Updated on Friday, 12 February 2010 06:25
 

ராமேசுவரத்தில் ரூ.25000 மதிப்பு பாலிதீன் பொருள்கள் பறிமுதல்

Print PDF

தினமணி 10.02.2010

ராமேசுவரத்தில் ரூ.25000 மதிப்பு பாலிதீன் பொருள்கள் பறிமுதல்

ராமேசுவரம், பிப்.9: ராமேசுவரம் கடையில் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் நடத்திய சோதனையில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பாலிதீன் பொருள்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

ராமேசுவரம் தீவில் சுற்றுசூழல், கடல்வளத்தைப் பாதுகாத்திட பாலிதீன் பை, கப்புகள் பயன்படுத்த மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். இதையடுத்து ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் பாலிதீன் பொருள்கள் பயன்பாடு பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஒரு சில வணிக கடைகள், டாஸ்மாக் கடைகளில் பாலிதீன் பை, கப்புகள் பயன்படுத்துவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் வந்தது. இதையடுத்து ராமேசுவரம் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் நகராட்சி தலைமை எழுத்தர் சுப்பிரமணி, நுகர்வோர் இயக்கத் தலைவர் அசோகன், விபத்து மீட்பு சங்கத் தலைவர் களஞ்சியம் மற்றும் வருவாய்துறை ஊழியர்கள் ராமேசுவரம் கடைத் தெருவில் உள்ள குடோன், மார்கெட் தெருவில் உள்ள கடைகள் மற்றும் டாஸ்மாக் பார்களில் சோதனை நடத்தினர்.

இதில் ரூ. 25ஆயிரம் மதிப்புள்ள பாலிதீன் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன. தொடர்ந்து பாலிதீன் பொருள்களை விற்பனை செய்யும் வணிகர்கள் மீது ரூ.2ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதோடு குற்றவியல் வழக்கும் பதிவு செய்யப்படும் என தாசில்தார் எச்சரிக்கை விடுத்தார்.

Last Updated on Wednesday, 10 February 2010 11:21
 


Page 114 of 135