தினமணி 13.01.2010
ரப்பர், பிளாஸ்டிக் பொருள்களை எரித்தால் கடும் நடவடிக்கை
பொருள்களை எரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி:
போகிப்பண்டிகையன்று கிராமங்களில் கிழிந்த பாய், துணிகள், விவசாயக் கழிவுகள் போன்ற தேவையற்ற பொருள்கள் எரிக்கப்படும். இது சூழலுக்கு தீமை ஏற்படுத்தாது ஒன்று. தற்போது போகியன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக் போன்ற பொருள்களை எரித்து நச்சுப் புகை ஏற்படுத்தப்படுகிறது. மக்கள் நெருக்கம் அதிகம் உளள நகரப் பகுதிகளில் இதுபோன்ற நச்சுப்புகை சேருவதால் சுவாசக் கோளாறுகள் ஏற்படுகின்றன. பழைய மரம், வறட்சி தவிர வேறு எதையும் எறிப்பதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதை மீறுவோர் மீது காவல் துறை மூலமாக நடவடிக்கைஎடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.