Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் கப், பைகளுக்கு தடை:கலெக்டர் உத்தரவு அமலுக்கு வந்தது: கண்டிப்புடன் பின்பற்ற வேண்டுகோள்

Print PDF

தினமலர் 02.01.2010

பிளாஸ்டிக் கப், பைகளுக்கு தடை:கலெக்டர் உத்தரவு அமலுக்கு வந்தது: கண்டிப்புடன் பின்பற்ற வேண்டுகோள்

திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் 20 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு அமலுக்கு வந்தது. ஆனால் டீக் கடைகளில் பிளாஸ்டிக் கப்களில் டீ, காப்பி கொடுப்பது ஓரளவு மட்டுமே குறைந்துள்ளது.பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்க 20 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள் (கேரி பேக்குகள்), பிளாஸ்டிக் கப்கள் (டீக்கடைகள் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளில் ஒருமுறை உபயோகிக்கப்படும் கப்கள்), மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து நெல்லை கலெக்டர் ஜெயராமன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நெல்லை மாவட்டத்தை பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாதமாக மாவட்ட மாற்றவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் படி பிளாஸ்டிக் கழிவுகளின் குப்பைகளை சேகரித்து கொடுப்பவர்களுக்கு ஒரு கிலோவுக்கு ரூ.1 வீதம் வழங்கப்படுகிறது. கடைகளிலும், வணிக நிறுவனங்களிலும் 20 மைக்ரானுக்கு குறைவான கவர்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. டீக் கடைகள், ஓட்டல்களில் சாம்பர், குருமா, கூட்டு மற்றும் பார்சலுக்காக பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஓட்டல்கள் மற்றும் டீக் கடைகளில் பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக பேப்பர் கப்களையும், பேப்பர் பைகளையும் பயன்படுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 20 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள், கப்களை பயன்படுத்த தடை உத்தரவு நேற்று முதல் நெல்லை மாவட்டத்தில் அமலுக்கு வந்தது. ஆனால் ஒரு சில கடைகள் தவிர மற்ற கடைகளில் டீ, காப்பியை பிளாஸ்டிக் கப்களிலேயே வழங்கினர். சில ஓட்டல்களில் டிபன் மற்றும் சாப்பாடு வாங்க பார்சல் வாங்க கண்டிப்பாக பாத்திரம் கொண்டு வரவேண்டும் என எழுதி போட்டுள்ளனர். ஆனால் பல ஓட்டல்களில் பார்சல்கள் கவர்களில் வழங்கப்பட்டது. 20 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதை கண்டிப்புடன் தடுக்கவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Print PDF

தினமணி 31.12.2009

பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கன்னியாகுமரி, டிச.29: சுற்றுலா தலங்களில் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் தடை செய்வது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் இணைந்து நிகழ்ச்சியை நடத்தியது. புத்தளம் எல்.எம்.பி.எம் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ் மாணவர்கள் விவேகானந்தபுரம் சந்திப்பில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பிளாஸ்டிக் பொருள்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கையேடுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கிருபானந்தராஜன், மாவட்ட சுற்றுலா அலுவலர் ஹரிராதாகிருஷ்ணன், பேரூராட்சி செயல் அலுவலர் ராசையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் முடிவில் கிருபானந்தராஜன் கூறியதாவது:

சுற்றுலாத் தலங்களில் பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்வது தொடர்பாக பழனி, வேளாங்கண்ணி, மதுரை, திருச்செந்தூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், திருவாரூர், நாகூர், திருத்தணி உள்ளிட்ட 9 வழிபாட்டு தலங்கள், கன்னியாகுமரி, குற்றாலம், கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு, மாமல்லபுரம் உள்ளிட்ட 6 சுற்றுலா தலங்களிலும் ரூ 2 லட்சம் வீதம் 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், பிளாஸ்டிக் தடுப்பு விளம்பரப் பலகைகள், பிளாஸ்டிக் டம்ளர் உள்ள கடைகளில் அவற்றை பறிமுதல் செய்து காகித டம்ளர்களை வைப்பது, பேரூராட்சி நிர்வாகம் நிறைவேற்றியுள்ள தீர்மானங்களை அமல்படுத்துவது கையாளப்படும் என்றார் அவர்.

Last Updated on Wednesday, 30 December 2009 10:26
 

பிளாஸ்டிக் பை உபயோகத்திற்கு தடை: பண்ருட்டி நகர மன்றத்தில் நாளை முடிவு

Print PDF

தினமலர் 30.12.2009

பிளாஸ்டிக் பை உபயோகத்திற்கு தடை: பண்ருட்டி நகர மன்றத்தில் நாளை முடிவு

பண்ருட்டி : மறு சுழற்சிக்கு பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் பைகள் விற்பனையை தடை செய்து பண்ருட்டி நகர மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.பண்ருட்டி நகர மன்ற மாதாந்திரக் கூட்டாம் நாளை (31ம் தேதி) காலை 11.30 மணிக்கு நடக்கிறது. சேர்மன் பச்சையப் பன் தலைமை தாங்குகிறார். கமிஷனர் உமாமகேஸ்வரி, துணை சேர்மன் கோதண்டபாணி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் மறுசுழற்சிக்கு உபயோகப்படாத 20 மைக்ரான் கீழ் உள்ள பிளாஸ்டிக் கேரி பேக் மற்றும் பிளாஸ் டிக் பைகள் விற்பனையை தடை செய் வது. திருமண மண்டபங்கள், சிற்றுண்டி, கோழி இறைச்சி கடை, பூக்கடைகளுக்கு மாதாந்திர கூடுதல் சேவை கட்டணம் வசூல் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

Last Updated on Wednesday, 30 December 2009 06:50
 


Page 122 of 135