Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்

Print PDF

தினமணி 10.12.2009

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்

உதகை, டிச. 9: நீலகிரி மாவட்டத்தின் இயற்கை மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்த்து இம்மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆனந்த் பாட்டீல் தெரிவித்துள்ளதாவது:

நீலகிரி மாவட்டத்தின் எழிலை மேம்படுத்தவும், தற்போதுள்ள இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல், அதற்குப் பதிலாக காகிதப் பைகளை பயன்படுத்தி இம்மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் முக்கியப் பகுதிகளான அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மற்றும் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளிலும் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம் முழுவதுமுள்ள உள்ளாட்சி அமைப்புகளில் இத்திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து 18 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் கேரி பேக், டம்ளர், தட்டு ஆகியவற்றை நீலகிரி மாவட்டத்தில் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறி விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் அபராதம் விதித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

எனவே, நீலகிரி மாவட்ட எல்லைக்குள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் இருக்க பொதுமக்களும், பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்யாமல் இருக்க வியாபாரிகளும் கேட்டுக்கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

உணவகங்கள், திருமண மண்டபங்களில் பிளாஸ்டிக் தடை

Print PDF

தினமணி 04.12.2009

உணவகங்கள், திருமண மண்டபங்களில் பிளாஸ்டிக் தடை

திருநெல்வேலி, டிச. 3: திருநெல் வேலியில் உள்ள உணவகங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என, மேயர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில், உணவகங்கள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்களுடன் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத் துவது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். மேயர் அ.லெ.சுப்பிர மணியன் தலைமை வகித்தார். ஆணையர் கா. பாஸ்கரன் முன்னிலை வகித்தார். மண்டலத் தலைவர்கள் சுப.சீதாராமன், எஸ்.எஸ். முகமது மைதீன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மேயர் பேசியதாவது: மாநகராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மறுசுழற்சிக்கு பயன்படும் பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர ஏனைய பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு சிமென்ட் ஆலைக்கு அனுப்பப்படுகின்றன.

பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை ஒழிப்பதற்கு திருமண மண்டபம் மற் றும் உணவகங்களின் உரிமையாளர் கள் மாநகராட்சிக்கு ஒத்துழைப் புத் தர வேண்டும்.

திருமண மண்டபத்தை முன்பதிவு செய்ய வருவோர்களி டம், மண்டபத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத் தக்கூடாது என்பதை உரிமை யாளர்கள் கண்டிப்புடன் கூற

வேண்டும். மக்காத குப்பைகளைத் தனியாகப் பிரித்து வைத்திருக்க வேண்டும். இதற்கென தனியாக தொட்டிகளை பயன்படுத்த வேண்டும் என்றார்.

கூட்டத்தில் பேசிய உணவக உரிமையாளர்கள் பலர், சாலைகளில் சுற்றித் திரியும் மாடு கள் தொட்டிகளில் உள்ள எச்சில் இலைகளை வெளியே இழுத்துப் போடுகின்றன என்றும் மாடுக ளைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் உள்ள நடைமேடைகளில் உணவுப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. அவை சுகாதாரமற்ற நிலையில் உள்ளன. மேலும், நடைமேடைகளில் பயணிகள் நடந்து செல்லவும் இடையூறாக உள்ளதாகவும் உணவக உரிமையாளர்கள் சுட்டிக் காட்டினர்.

இதுகுறித்து சோதனை செய்து நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று ஆணையர் உறுதிய ளித்தார்.

 

நாகர்கோவிலில் பிளாஸ்டிக் பொருள்கள் தவிர்ப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

Print PDF

தினமணி 03.12.2009

நாகர்கோவிலில் பிளாஸ்டிக் பொருள்கள் தவிர்ப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

நாகர்கோவில், டிச. 2: நாகர்கோவில் ஒழுகினசேரியில் பிளாஸ்டிக் பொருள்கள் தவிர்ப்பு விழிப்புணர்வு மனித சங்கிலியை புதன்கிழமை மு.. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், உள்ளாட்சித் துறை ஆகியவை ஏற்பாடு செய்திருந்தது. இந்த மனித சங்கிலி நிகழ்ச்சியில் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும், பதாகைகளையும் ஏந்தி சாலையின் இருபுறமும் நின்றிருந்தனர். பிளாஸ்டிக் பொருள்களை தவிர்ப்போம், சுற்றுச்சூழலை காப்போம் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.

மேலும் திருநெல்வேலியிலுள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படும் லாரிகளையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சுரேஷ்ராஜன், டி.பி.எம். மைதீன்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 03 December 2009 08:07
 


Page 125 of 135