Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

சுத்திகரிப்பு நிலையம் அமைக்காத சாயப்பட்டறைகளுக்கு சீல்

Print PDF

தினமணி 19.11.2009

சுத்திகரிப்பு நிலையம் அமைக்காத சாயப்பட்டறைகளுக்கு சீல்

ஈரோடு, நவ. 18: ஈரோட்டில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காத 7 சாயப்பட்டறைகளுக்கு புதன்கிழமை சீல் வைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் ஏராளமான சாயப்பட்டறைகள் உள்ளன. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதால் தண்ணீர் மாசடைந்து விளைநிலங்கள் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களுக்கு ஏராளமான நோய்கள் உண்டாகின்றன என்று புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுத்திகரிப்பு நிலையம் அமைக்காத சாயப்பட்டறைகளை ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

அதன்படி வருவாய் மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் சாயப்பட்டறைகளில் சோதனை நடத்தி, சுத்திகரிப்பு நிலையம் அமைக்காத சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஈரோடு வருவாய்க் கோட்டாட்சியர் பி.பெஞ்சமின் மற்றும் அதிகாரிகள், ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் உள்ள சாயப்பட்டறைகளில் புதன்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காத 7 சாயப்பட்டறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது .

"தொடர்ந்து சாயப்பட்டறைகளில் சோதனை நடத்தப்படும். சுத்திகரிப்பு நிலையம் அமைக்காத சாயப்பட்டறைகளுக்கு சீல் வைக்கப்படும்' என்று வருவாய்க் கோட்டாட்சியர் பெஞ்சமின் தெரிவித்தார் .

Last Updated on Thursday, 19 November 2009 08:29
 

நெய்வேலி நகரியத்தில் பாலிதீன் பைகளை பயன்படுத்த தடை

Print PDF

தினமணி 18.11.2009

நெய்வேலி நகரியத்தில் பாலிதீன் பைகளை பயன்படுத்த தடை

நெய்வேலி நவ .17: நெய்வேலி நகரியத்தில் பாலிதீன் பைகளை பயன்படுத்த என்எல்சி நகர நிர்வாகம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது

புவிவெப்பபம் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது உலகளவில் அதிகரித்துவருகிறது. இதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுóக்க பல்வேறு நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதன் ஒருபகுதியாக மத்தியப் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நெய்வேலி நகரியத்தில் பாலிதீன் பைகளை பயன்படுத்த நகர நிர்வாகம் தடைவிதித்துள்ளது. அதன்படி கடைகளில் பொருள் வாங்குவோருக்கு பாலிதீன் பைகளில் பொருள்களைக் கொடுக்கக் கூடாது, ஓட்டல்கள், டீக் கடைகளில் பிளாஸ்டிக் டம்பளர்களை பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தியிருப்பதோடு, மீறி செயல்படுவோருக்கு அபராதமும் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து நெய்வேலி நகரியத்தில் கடந்த சில தினங்ளாக பாலிதீன் பயன்பாட்டை வணிக நிறுவனங்கள் குறைத்துள்ளன.

Last Updated on Wednesday, 18 November 2009 08:44
 

ஆட்சியர் தலைமையில் பிளாஸ்டிக் மேலாண்மைக் குழு

Print PDF

தினமணி 17.11.2009

ஆட்சியர் தலைமையில் பிளாஸ்டிக் மேலாண்மைக் குழு

தூத்துக்குடி, நவ. 16: பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தடுக்க தூத்துக்குடி மாவட்டத்தில் பிளாஸ்டிக் மேலாண்மைக் குழு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது,

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகளில் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள், தம்ளர்கள் போன்றவை சுற்றுச்சூழல் பாதிப்பையும், நகரத்தின் தூய்மையையும், அழகையும் கெடுப்பதாக உள்ளது. இதனைத் தடுக்க மாவட்ட அளவிலான பிளாஸ்டிக் மேலாண்மை குழு ஒன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதில் மாவட்ட சுற்றுப்புறச் சூழல் நலப் பொறியாளர், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர், மாவட்ட கல்வி அதிகாரி, பேரூராட்சிகள் உதவி இயக்குநர், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர், எம்பவர் தொண்டு நிறுவன இயக்குநர், கோவில்பட்டி நகராட்சி ஆணையர், திருச்செந்தூர் தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர், மாவட்ட சுற்றுலா அலுவலர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த குழுவின் முதலாவது கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. பிளாஸ்டிக் குப்பைகளை மாநகராட்சி, நகராட்சிகள் தரம் பிரித்து அவற்றை திருநெல்வேலியில் உள்ள இந்தியா சிமெண்ட் நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும். அங்கு இந்த கழிவுகள் சிமெண்ட் உலையில் வைத்து நிலக்கரியுடன் சேர்த்து எரிக்கப்படும்.

தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி நகராட்சி, திருச்செந்தூர் பேரூராட்சிகளில் வீடுகள் தோறும் மக்கும் குப்பைகளையும், பிளாஸ்டிக் குப்பைகளையும் பிரித்து பெற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட கல்வி அலுவலர் மூலமாக அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

÷தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுலாத்துறை, நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு பிளாஸ்டிக் குப்பைகளற்ற மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை மாற்ற வேண்டும். பொதுமக்கள் அனைவரும் இதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

Last Updated on Tuesday, 17 November 2009 05:20
 


Page 127 of 135