தினமணி 06.04.2013
தஞ்சை நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ
தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்தில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
தஞ்சாவூர் நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் அள்ளப்படும் குப்பைகள் ஜெபமாலைபுரத்தில் உள்ள குப்பைக் கிடங்களில் கொட்டப்படுவது வழக்கம். இந்தக் கிடங்கில் வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீ மேலும் பரவியதால் அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, சுற்றுப் பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களிலிருந்து 5 வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மேலும், நகராட்சி மற்றும் தனியார் தண்ணீர் லாரிகளும் தீயணைப்புக்காக அனுப்பப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் முயற்சி மேற்கொண்டாலும், அணைக்க முடியவில்லை. இதனால், தீ தொடர்ந்து இரவிலும் எரிந்ததுடன், சுற்றுப் பகுதிகளும் புகை மண்டலமாகக் காணப்படுகின்றன. தகவலறிந்த கோட்டாட்சியர் என். காளிதாஸ், நகர்மன்றத் தலைவர் சாவித்திரி கோபால், நகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
தஞ்சை நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ
தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்தில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
தஞ்சாவூர் நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் அள்ளப்படும் குப்பைகள் ஜெபமாலைபுரத்தில் உள்ள குப்பைக் கிடங்களில் கொட்டப்படுவது வழக்கம். இந்தக் கிடங்கில் வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீ மேலும் பரவியதால் அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, சுற்றுப் பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களிலிருந்து 5 வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மேலும், நகராட்சி மற்றும் தனியார் தண்ணீர் லாரிகளும் தீயணைப்புக்காக அனுப்பப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் முயற்சி மேற்கொண்டாலும், அணைக்க முடியவில்லை. இதனால், தீ தொடர்ந்து இரவிலும் எரிந்ததுடன், சுற்றுப் பகுதிகளும் புகை மண்டலமாகக் காணப்படுகின்றன. தகவலறிந்த கோட்டாட்சியர் என். காளிதாஸ், நகர்மன்றத் தலைவர் சாவித்திரி கோபால், நகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.