Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

தேவகோட்டையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

Print PDF
தினமணி           08.03.2013

தேவகோட்டையில் தடைசெய்யப்பட்ட  பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நகராட்சி அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பை, கப்புகளை பறிமுதல் செய்தனர்.

நகராட்சி ஆணையராக புதிதாக பொறுப்பேற்றுள்ள சரவணன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நகரில் ராமநகரிலிருந்து பேருந்துநிலையம் வரை இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார்.

நகரின் சுகாதாரம் குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். தினமும் காலையில் நகரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று துப்புரவு பணிகள் நடைபெற்றுவருவதை பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில் நகரில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள் சில இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாக அவருக்கு புகார் சென்றது. இதைதொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகளை அழைத்துக்கொண்டு பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இனிமேல் தடைசெய்யப்பட்ட இத்தகைய பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
 

மாநகராட்சி குப்பை கிடங்கில் இருந்து எழும் புகை மண்டலத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

Print PDF
தினகரன்                   07.03.2013

மாநகராட்சி குப்பை கிடங்கில் இருந்து எழும் புகை மண்டலத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா?


தூத்துக்குடி,  : தூத்துக்குடி மாநகராட்சி குப்பை கிடங்கில் வைக்கப்படும் தீயினால் ஏற்படும் புகை மண்டலம் பெரும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. உயிர்ப்பலி ஏற்படும் முன் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு தருவைகுளம் ரோட்டில் உள்ளது. இதில் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் இருந்து தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவுகள் மொத்தமாக கொட்டப்படுகிறது. இங்கு கொட்டப்படும் பல கழிவுகளுக்கு மாநகராட்சி ஊழியர்களால் தீவைத்து கொளுத்தி உரமாக்கப்படுகிறது. இதற்காக அங்கு மலைபோல் குவிக்கப்பட்டுள்ள குப்பைகள் எரிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால் தற்போது பரந்து விரிந்த அந்த உரக்கிடங்கின் துவக்க பகுதியி லேயே பெரும்பாலான குப்பைகள் கொட்டப்பட்டு அவை எரிக்கப்படுகின்றன.

தொடர்ந்து தினமும் இங்குள்ள குப்பைகள் எரிக்கப்படும் போது அவை அதிகமாக இருப்பதால் நாள்கணக்கில் எரிந்து வருகிறது. இதனால் கரும்புகை மண்ட லம் உருவாகிறது. இந்த புகை மண்டலம் காற்றில் திசையில் நகர்ந்து சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 சதுர கிமீ தொலை வுக்கு  பரவிவருகிறது. இதில் மாப்பிள்ளையூரணியில் இருந்து தருவைகுளம் செல்லும் சாலையிலும் இந்த புகை மண்டலம் பரவி விடுகிறது.

இதனால் பகலில் கூட வாகனங்கள் சாலையில் செல்ல முடியாத நிலை உள்ளது. இருசக்கர வாகன பயணிகள் கண்களில் எரிச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டு வண்டி ஓட்ட முடியாத அளவிற்கு பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் கார்கள், பஸ்கள், லாரிகள் உள்ளிட்டவை பகலில் மிஸ்ட் லைட்களை எரியவிட்டே இந்த சாலையை கடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள் ளன. இந்த புகை மண்டலத்தால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு, அவ்வப் போது சிறு, சிறு விபத்துகள் ஏற்பட்டு தினமும் பலர் கைகால்கள் ஓடிந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். வாகனங்கள் பல சேதமடைந்து வருகின்றன.

டோல்கேட் கட்டணத்தில் இருந்து தப்பிக்க குறுக்கு வழியை பயன்படுத்தும் பல லாரிகளும், மணல் கடத்தல் லாரிகளும்கூட இந்த பாதையை பயன்படுத்துவதால் இங்கு பெரிய அளவிலான விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த புகையால் பெரும் உயிர்ப்பலி ஏற்படும் முன் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிக்களும் தெரிவித்துள்ளனர்.
 

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் தடை செய்யப்பட்ட 80 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

Print PDF
தினகரன்         05.03.2013

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் தடை செய்யப்பட்ட 80 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்


சேலம், : சேலம் புதிய பேருந்து நிலையத்தில் தடை செய்யப்பட்ட 80 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து, ரூ.2400 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

சேலம் மாநகராட்சி பகுதிகளில் 40 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகளை வணிக நிறுவனங்கள், மளிகை கடைக்காரர்கள், பொதுமக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது சோதனைகள் நடத்தி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து வருகிறார்கள். மேலும், அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளில் நேற்று, சுகாதார ஆய்வாளர்கள் கந்தசாமி, வெங்கடாசலம் மற்றும் ஊழியர்கள் சோதனை நடத்தினர். இதில் 46 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.

அங்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகளை பரிசோதித்ததில், 16 கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 80 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கடைகாரர்களிடம் ரூ.2400 அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Last Updated on Tuesday, 05 March 2013 11:30
 


Page 22 of 135