தினகரன் 05.03.2013
பிளாஸ்டிக் பயன்படுத்த கோபி நகராட்சி தடை
கோபி, : கோபி நகராட்சி பகுதியில் 40 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோபி நகராட்சிபகுதிகளில் 40 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் ஜான்சன் கூறியதாவது:
40 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பொருட்களை எளிதில் அழிக்க முடியாது என்பதால் தமிழகம் முழுவதும் பயன்படுத்த அரசு தடைவிதித்துள்ளது. இதுகுறித்து அரசாணையும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு 100 ரூபாயும், வணிக நிறுவனங்களுக்கு 500 ரூபாயும்,சில்லரை விற்பனையாளர்களுக்கு ஆயிரம் ரூபாயும், மொத்த விற்பனையாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும், தயாரிப்பாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து மூன்று முறை அபராதத்திற்கு உள்ளானால் வியாபார உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் குற்ற வழக்கும் தொடரப்படும்.
அதே போன்று பிளாஸ்டிக் கழிவுகளை திறந்த வெளியில் போட்டு தீவைத்து எரிக்கக்கூடாது, பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக பிரித்து நகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும், பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மற்றும் உறைகளில் தயாரிப்பாளர்கள் பெயர், பதிவு எண் மற்றும் தடிமன் குறிப்பிடவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
பிளாஸ்டிக் பயன்படுத்த கோபி நகராட்சி தடை
கோபி, : கோபி நகராட்சி பகுதியில் 40 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோபி நகராட்சிபகுதிகளில் 40 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் ஜான்சன் கூறியதாவது:
40 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பொருட்களை எளிதில் அழிக்க முடியாது என்பதால் தமிழகம் முழுவதும் பயன்படுத்த அரசு தடைவிதித்துள்ளது. இதுகுறித்து அரசாணையும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு 100 ரூபாயும், வணிக நிறுவனங்களுக்கு 500 ரூபாயும்,சில்லரை விற்பனையாளர்களுக்கு ஆயிரம் ரூபாயும், மொத்த விற்பனையாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும், தயாரிப்பாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து மூன்று முறை அபராதத்திற்கு உள்ளானால் வியாபார உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் குற்ற வழக்கும் தொடரப்படும்.
அதே போன்று பிளாஸ்டிக் கழிவுகளை திறந்த வெளியில் போட்டு தீவைத்து எரிக்கக்கூடாது, பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக பிரித்து நகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும், பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மற்றும் உறைகளில் தயாரிப்பாளர்கள் பெயர், பதிவு எண் மற்றும் தடிமன் குறிப்பிடவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.