Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டுக்கு தடைமீறினால் நடவடிக்கை: நகராட்சி எச்சரிக்கை

Print PDF
தின மலர்                26.02.2013

பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டுக்கு தடைமீறினால் நடவடிக்கை: நகராட்சி எச்சரிக்கை

கோபிசெட்டிபாளையம்: கோபி நகராட்சியில், 40 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கோபி நகராட்சி கமிஷனர் ஜான்சன் கூறியதாவது:பிளாஸ்டிக் கழிவுகள் கையாளுதல் விதி, 2011ன்படி கோபி நகராட்சியில், 40 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள், அனைத்து வகையான பிளாஸ்டி டீ கஃப்கள் விற்கவோ, உபயோகிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் உபயோகத்தை தடை செய்யப்பட்டது குறித்து அனைத்து வியாபாரிகளுக்கும் பல முறை தெரிவித்தும், கால அவகாசம் வழங்கியும், இன்னும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள் உபயோகத்தில் உள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகளை உபயோகப்படுத்துபவர்களுக்கு அபராதம் விதித்து வசூல் செய்ய நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மீறி உபயோகிப்பாளர்களுக்கு, 100 ரூபாய், பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்கு, 500 ரூபாய், சில்லரை விற்பனையாளர்களுக்கு, 1,000 ரூபாய், மொத்த விற்பனையாளர்களுக்கு, 2,000 ரூபாய், தயாரிப்பாளர்களுக்கு, 5,000 ரூபாய் என அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து மூன்று முறை அபராதம் விதிக்கப்பட்டால் வியாபார உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், குற்ற வழக்கும் தொடரப்படும்.பல இன்னல்களையும், சுகாதாரக் கேடுகளையும் விளைவிக்கும், 40 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்த வேண்டாம், என அவர் கேட்டுக்கொண்டார்.
Last Updated on Tuesday, 26 February 2013 11:40
 

பிளாஸ்டிக் சோதனை:ரூ.16 ஆயிரம் அபராதம்

Print PDF
தின மணி             20.02.2013

பிளாஸ்டிக் சோதனை:ரூ.16 ஆயிரம் அபராதம்

திருவண்ணாமலை நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய திடீர் ஆய்வில், பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்திய கடைக்காரர்களிடம் இருந்து ரூ.16 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

நகராட்சி எல்லைக்குள்பட்ட பேருந்து நிலையம், போளூர் சாலை பகுதிகளில் உள்ள கடைகளில் சுகாதார ஆய்வாளர்கள் இரா.ஆல்பர்ட், வினோத் கண்ணா ஆகியோர் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, 40 மைக்ரான் அளவுக்குக் குறைவான திறனுள்ள பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்த கடைக்காரர்களுக்கும், பயன்படுத்திய கடைக்காரர்களுக்கும் தலா ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்ட கடைக்காரர்களிடம் இருந்து முதல் முறையாக ரூ.16 ஆயிரம் அபராதத் தொகையை அதிகாரிகள் வசூலித்தனர்.

இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் என்றும், கடைக்காரர்கள் 40 மைக்ரான் அளவுக்கு குறைவான திறன் கொண்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது என்று நகராட்சி ஆணையர் பெ.விஜயலட்சுமி எச்சரித்துள்ளார்.

Last Updated on Thursday, 21 February 2013 12:07
 

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்

Print PDF
தின மணி             20.02.2013

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் பேரூராட்சி, திருவண்ணாமலை அமைதி அறக்கட்டளை சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பேரூராட்சித் தலைவர் சித்ரா கார்த்திகேயன் தலைமை வகித்தார். அமைதி அறக்கட்டளை இயக்குநர் ராஜாராம் வரவேற்றார். செயல் அலுவலர் அண்ணாதுரை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்துப் பேசினார். பின்னர் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து பேரூராட்சி வளாகம் மற்றும் பேரூராட்சிக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.


Last Updated on Thursday, 21 February 2013 12:05
 


Page 24 of 135