பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம்
செய்யாறில், திருவத்திபுரம் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகம் 5 இடங்களில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் விஜய் பிங்ளே உத்தரவின் பேரில், செய்யாறில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பஸ் நிலையம், மார்க்கெட், ஆரணி கூட்டுரோடு, திருவோத்தூர் ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஆலயம், வழூர்ப்பேட்டை ஸ்ரீ பட்சீஸ்வரர் ஆலயம் ஆகிய இடங்களில், திருவண்ணாமலை மண்ணின் மைந்தர்கள் கலைக்குழுவினர் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.
நிகழ்ச்சிக்கு திருவத்திபுரம் நகர்மன்றத் தலைவர் பாவை ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். நகர்மன்ற உறுப்பினர்கள் ரமணமுருகன், செல்வதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆணையர் (பொறுப்பு) பி.கே.ரமேஷ், துப்புரவு ஆய்வாளர் கே.மதனராசன், சமுதாய அமைப்பாளர் சு.ந.அம்பேத்கர் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
செய்யாறில், திருவத்திபுரம் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகம் 5 இடங்களில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் விஜய் பிங்ளே உத்தரவின் பேரில், செய்யாறில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பஸ் நிலையம், மார்க்கெட், ஆரணி கூட்டுரோடு, திருவோத்தூர் ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஆலயம், வழூர்ப்பேட்டை ஸ்ரீ பட்சீஸ்வரர் ஆலயம் ஆகிய இடங்களில், திருவண்ணாமலை மண்ணின் மைந்தர்கள் கலைக்குழுவினர் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.
நிகழ்ச்சிக்கு திருவத்திபுரம் நகர்மன்றத் தலைவர் பாவை ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். நகர்மன்ற உறுப்பினர்கள் ரமணமுருகன், செல்வதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆணையர் (பொறுப்பு) பி.கே.ரமேஷ், துப்புரவு ஆய்வாளர் கே.மதனராசன், சமுதாய அமைப்பாளர் சு.ந.அம்பேத்கர் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.