Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அதிகாரி தகவல் ஆகஸ்ட் 8ல் பெங்களூர் பட்ஜெட் இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.

Print PDF

தினகரன் 23.07.2010

அதிகாரி தகவல் ஆகஸ்ட் 8ல் பெங்களூர் பட்ஜெட் இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.

பெங்களூர், ஜூலை 23: இந்நிதியாண்டுக்கான பெங்களூர் பட்ஜெட் ஆக.8ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாநகராட்சி நிதி மற்றும் வரி நிலைக்குழு தலைவர் சதாசிவா தலைமையில் உள்ள 6 நிலைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கடந்த ஒருவாரமாக 2010&11ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இதில் எந்தெந்த துறைகளுக்கு முக்கியத்தும் கொடுத்து நிதி ஒதுக்கீடு செய்வது என்பது உள்பட பல விஷயங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கழிவுநீர் கால்வாய், சுத்தமான குடிநீர், தடையில்லா மின்சாரம், நவீன வசதிகளுடன் கூடிய பூங்கா, புதிய கட்டிட புனரமைப்பு உள்பட பல புதிய திட்டங்களுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுக்க சதாசிவா முடிவு செய்துள்ளார்.

மாநகரில் கொட்டி கிடக்கும் திட கழிவுகளை அகற்ற ஒரு நிறுவனத்திற்கு குத்தகை கொடுப்பதில் முறைகேடு நடப்பதை தவிர்க்க. ஒவ்வொரு வார்ட்டிலும் திட கழிவுகள் அகற்ற தனிதனியாக குத்தகை கொடுக்கும் திட்டத்தை பட்ஜெட்டில் அறிமுக்க நிலைக்குழு தலைவர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சாலை விபத்துகளில் பலியாகும் கால்நடைகளை தகனம் செய்ய தனியாக மின்சார இடுகாடு அமைப்பது, பெரிய கால்வாய்களில் தூர்வாரும் பணி மேற்கொள்வது, வாகனங்கள் நிறுத்த தனியாக பார்க்கிங் வசதி. போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சாலைகளில் மேம்பாலம் மற்றும் சுரங்க பாலம் அமைப்பது உள்பட பல புரட்சிகரமான திட்டங்களை பட்ஜெட்டில் அறிமுக்க சதாசிவா முடிவு செய்துள்ளதாகவும், பட்ஜெட்டை வரும் ஆகஸ்ட் 8ம் தேதி தாக்கல் செய்யப்படும்.