தினமலர் 24.02.2010
மாநகராட்சி பட்ஜெட் நாளை தாக்கல்
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் நாளை நடக்கிறது. இவ்வாண்டு உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. திருப்பூர் மாநகராட்சி உரு வாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளை கடந்து, மூன் றாம் ஆண்டில் பயணிக்கிறது. பின்னலாடை தொழில் வளம் மிகுந்த இந்நகரில், மாநகராட்சிக்கு கிடைக் கும் ஆண்டு வருவாய் என் பது குறைவாகவே உள்ளது. சொத்து வரி, குடிநீர் கட் டணம்; தொழில் வரி மூலம் கிடைக்கும் வருவாய், மாநகராட்சி கடைகள், சந்தை குத்தகை இனங்கள் வரவு மூலம் வரும் ஆண்டு வருவாய் அடிப்படையில், வரவு - செலவு திட்டம் தயாரிக்கப்படுகிறது. இவ் வாண்டு, உபரி பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிடப் பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சி ஊழியர்களுக்கான சம்ப ளம், சேமநல நிதி, ஓய்வூதி யம், குடும்ப ஓய்வூதியம், மாநகராட்சி வாங்கியுள்ள கடனுக்கான வட்டி, வாகனங் கள் பராமரிப்பு, எரிபொருள் செலவு, குப்பை சேகரிக் கும் மகளிர் சுய உதவி குழு வினருக்கான நிதி ஒதுக் கீடு என அடிப்படை செலவினங் களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால், வளர்ச்சி பணி களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வில்லை என மாநகராட்சி வட்டாரத்தில் பேசப் படுகிறது.