தினமலர் 01.03.2010
எட்டு பேரூராட்சிகளுக்கு அலுவலகம் கட்ட ரூ.1.68 கோடி நிதி ஒதுக்கீடுதேனி:தேனி மாவட்டத்தில் எட்டு பேரூராட்சிகளில் அலுவலகங்கள் கட்டுவதற்கு ரூ.1.68 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள் ளது. பெரியகுளம் நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டடம் கட்டுவதற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. போடி நகராட்சியில் கூடுதல் அலுவலக கட்டடம் கட்டுவதற்கு ஒன்பது லட்சம் ரூபாய், கம்ப்யூட்டர் அறை கட்டுமானத்திற்கு ஆறு 6 லட்சம் ரூபாய், தென்றல் நகரில் சிறுவர் பூங்கா அமைக்க ஏழு லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சிகளுக்கு கட்டடம்: வடுகபட்டி பேரூராட்சி அலுவலகம் கட்டுவதற்கு 20 லட்சம், ஓடைப்பட்டி பேரூராட்சி அலுவலகம் மற்றும்வணிக வளாகம் கட்டுவதற்கு 30 லட்சம், குச்சனூர் பேரூராட்சி அலுவலகம் மற்றும் வணிக வளாகம் கட்டுவதற்கு 27.10 லட்சம், அனுமந்தன்பட்டி பேரூராட்சி அலுவலகம் கட்டுவதற்கு 14.75 லட்சம், பண்ணைப்புரம் பேரூராட்சி அலுவலகம் கட்டுவதற்கு ரூ.14.75லட்சமும், காமயகவுண்டனபட்டி பேரூராட்சி அலுவலகம் கட்டுவதற்கு 19.90 லட்சமும், தேவதானப்பட்டி பேரூராட்சி அலுவலகம் கட்டுவதற்கு 19.90 லட்சம், ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகம் கட்டுவதற்கு 20 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சமுதாய கூடங்கள்: தேவாரம் மூணான்டிபட்டியில் 12 லட்சம் ரூபாய் செலவிலும், அனுமந்தன்பட்டி கார்க்கில் சிக்கையன்பட்டியில் 11.20 லட்சம் ரூபாயிலும், தாமரைக்குளம் பங்களாபட்டியில் 15.50 லட்சம், ஹைவேவிஸ் மகாராஜமேட்டில் 10.20 லட்சம் செலவிலும் சமுதாய கூடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தேவாரம் பஸ்ஸ்டாண்டில் பத்து லட்சம் ரூபாய் செலவில் வணிகவளாகமும், ஹைவேவிஸ் பேரூராட்சி அலுவலக கட்டட முதல்தளத்தில் 12 லட்சம் செலவில் மன்ற கூட்ட அரங்கமும், 16.50 லட்சத்தில் அணைகட்டு அருகில் 37.60 லட்சம் ரூபாயில் விருந்தினர் மாளிகையும் கட்டப்பட உள்ளது.