Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கல்வி, சுகாதாரத்துக்கு அதிக நிதி : மாநகராட்சி நிதிக்குழு முடிவு

Print PDF

தினமலர் 12.03.2010

கல்வி, சுகாதாரத்துக்கு அதிக நிதி : மாநகராட்சி நிதிக்குழு முடிவு

கோவை: நடப்பாண்டு மாநகராட்சி பட்ஜெட்டில் கல்வித்துறைக்கும், சுகாதாரத்துறைக்கும் அதிக நிதி ஒதுக்க நிதிக்குழு கூட்டத்தில் முடிவானது.கோவை மாநகராட்சி நிதிக்குழு கூட்டம் தலைவர் நந்தகுமார் தலைமையில் நடந்தது. கமிஷனர் அன்சுல் மிஸ்ரா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், நடப்பாண்டிற்கான மாநகராட்சி பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்குவது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப் பட்டது. கல்வித்துறைக்கும், சுகாதாரத்துறைக்கும் அதிக நிதி ஒதுக்க நிதிக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் தெரிவித்தனர்.

இதில், நிதிக்குழு உறுப்பினர்கள் கூறியதாவது : இரு துறைகளையும் மேம்படுத்த பல திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மாநகராட்சி பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்றப்படும். நகரமேம்பாடு, சுகாதாரம், குடிநீர், வடிகால் மற்றும் பாதாள சாக்கடை ஆகியவை மேம்படுத்த வேண்டும். இந்த இரு துறைகளுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.கூட்டத்தில், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் உதயகுமார், கவுன்சிலர்கள் செந்தில்குமார், கார்த்திக் செல்வராஜ், மாநகராட்சி கணக்கு அலுவலர் கோமதிநாயகம் ஆகியோர் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 12 March 2010 07:01