Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை மாநகராட்சியில் ரூ. 381.13 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்: ரூ. 21.30 கோடி பற்றாக்குறை

Print PDF

தினமணி 23.03.2010

கோவை மாநகராட்சியில் ரூ. 381.13 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்: ரூ. 21.30 கோடி பற்றாக்குறை

கோவை, மார்ச் 22: கோவை மாநகராட்சியில் ரூ. 381.13 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ. 21.30 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் 2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதிக்குழுத் தலைவர் அ.நந்தகுமார் தாக்கல் செய்தார். கூட்டத்துக்கு மேயர் ஆர்.வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா முன்னிலை வகித்தார்.

மாநகராட்சியின் செலவு ரூ. 381.13 கோடி என்றும், செலவு ரூ. 359.83 கோடி என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ. 21.30 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க பல்வேறு வருவாய் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

பாதசாரிகளின் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் மேட்டுப்பாளையம் சாலை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உயர்மட்ட நடைபாதைகள் அமைக்க ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி புல்வெளிகளுடன் கூடிய நடைபாதைகள் அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தியாகி குமரன் மார்க்கெட், அண்ணா மார்க்கெட்களை நவீனமயமாக்க ரூ. 50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. சிங்காநல்லூர், சத்தி சாலையில் எரிவாயு மயானங்கள் அமைக்க ரூ. 2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் 8 மேனிலைப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க ரூ. 6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணினி ஆய்வகங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி காதுகேளாதோர் மற்றும் வாய்பேசாதோர் பள்ளியில் கூடுதல் உபகரணங்கள் வாங்க ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி 3 திட்டச்சாலைகள் அமைப்பதற்கான நில ஆர்ஜித பணிகளுக்காக ரூ. 2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்க ரூ. 2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளிகளில் சுற்றுச்சூழல் இயக்கம் துவக்க ரூ. 50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கவுன்சிலர் சிறப்புநிதியாக தலா ரூ. 5 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 3.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க ரூ. 30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி பள்ளிகளில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்தவும், கூடுதல் விளையாட்டு உபகரணங்கள் வாங்கவும் ரூ. 25 லட்சமும், மாணவர்களை கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல ரூ. 10 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

மாநகராட்சி பட்ஜெட்டில் புதிய அம்சங்கள்

ஆண்டுக்கு
4 புதிய திட்டச்சாலைகள் உருவாக்கம்

ஏழை மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம்

மேனிலைப் பள்ளிகளுக்கு ஐ
.எஸ்.. தரச்சான்று பெறும் திட்டம்

கட்டட வரைபட தயாரிப்பு பிரிவு துவக்கம்.

இரு இடங்களில் நவீன உயர்மட்ட நடைபாதைகள்

நவீனமயமாகிறது தியாகி குமரன் மார்க்கெட்
, அண்ணா மார்க்கெட்

மேட்டுப்பாளையம் சாலையில் அனைத்து வசதிகளுடன்கூடிய திருமண மண்டபம்.

கவுன்சிலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கும் திட்டம்

துப்புரவாளர் போதை மறுவாழ்வு மையம்

நடப்பு ஆண்டுக்குள் பில்லூர் 2-வது கூட்டுக்குடிநீர்த் திட்டம் அமல்

8 குளங்களை தனியார் பங்களிப்புடன் சீரமைக்கும் திட்டம்

24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம்.

Last Updated on Tuesday, 23 March 2010 10:56