Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காய்கறி மார்க்கெட் கடைகளுக்கு வாடகையை உயர்த்த முடிவு

Print PDF

தினமலர்     12.05.2010

காய்கறி மார்க்கெட் கடைகளுக்கு வாடகையை உயர்த்த முடிவு

திருவையாறு: திருவையாறு பேரூராட்சி காய்கறி மார்க்கெட் கடைகளுக்கு வாடகையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.திருவையாறு பேரூராட்சி காய்கறி மார்க்கெட் கடைகளுக்கான வாடகையை உயர்த்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவையாறில் நடந்தது.பேரூராட்சித் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் மனோகரன், கவுன்சிலர்கள் குமணன், முருகானந்தம், காந்தி, ஜெயராமன், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சாமிநாதன், கண்ணன், சங்கர், சவுரிராஜன், திவ்யநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.காய்கறி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளுக்கும் வாடகை உயர்த்துவது பற்றி வியாபாரிகளு டனும் ஆலோசிக்கப்பட்டது. தினசரி கடைகளுக்கு 50 காசுவீதம் உயர்த்துவது என்றும், இந்த வாடகை உயர்வை கடந்த 1ம்தேதி முதல் அமல்படுத்துவது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.