தினகரன் 09.06.2010
மாநில அரசு ஒப்புதல் மாநகராட்சிக்கு ரூ.271 கோடி நிதி
புதுடெல்லி, ஜூன் 9: மாநகராட்சியின் செயல்பாட்டுக்காக மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து மதிய உணவு திட்டம், கல்வி, சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு பணிகள் ஆகியவற்றுக்காக ரூ.271 கோடி ஒதுக்கீடு செய்ய அரசு ஒப்புதல் அளி த்துள்ளது. இது நடப்பு நிதியாண்டில் மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மூன்றில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மாநில நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ஏ.கே.வாலியா கூறியதாவது:
மாநகராட்சிக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ரூ.271 கோடி நிதியில் நகர்ப்புற மேம்பாட்டுக்காக ரூ.138 கோடியும், சாலைகள் மேம்பாட்டு பணிக்கு ரூ.36.75 கோடியும், கல்வி மற்றும் மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.96 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்கு நடப்பு நிதியாண்டில் மொத்தம் ரூ.912 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது ஒதுக்கப்பட்டுள்ளது முதல்கட்ட நிதி. மக்களுடன் தொடர்புடைய திட்டங்களில் எந்த நிதி குறைப்பும் இல்லை. மாநகராட்சி இந்த நிதியை முறையாக பயன்படுத்தி, திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றும் என்று நம்புகிறோம். இவ்வாறு அமைச்சர்