Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தானே மாநகராட்சி முடிவு தீயணைப்பு வீரர்களுக்கு ரூ.15 லட்சம் இன்சூரன்ஸ்

Print PDF

தினகரன் 16.06.2010

தானே மாநகராட்சி முடிவு தீயணைப்பு வீரர்களுக்கு ரூ.15 லட்சம் இன்சூரன்ஸ்

தானே, ஜூன்16: தீய ணைப்பு படை வீரர் களுக்கு செய்யப்பட்டுள்ள காப்பீட்டு தொகையை ரூ.15 லட்சமாக உயர்த்த தானே மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

தீயணைப்பு படை வீரர்கள் பெயரில் தற் போது ரூ.2 லட்சத்துக்கு மட்டுமே இன்சூரன்ஸ் செய்யப்படுகிறது. பணியின் போது அவர் கள் இறக்க நேரிட்டால் ரூ. 2 லட்சம் இன்சூரன்ஸ் பணம்தான் கிடைக்கும்.

இதற்கிடையே கடந்த ஆண்டு தானேயில் ஒரு அடுக்கு மாடி கட்டிடத் தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 6 தீயணைப்பு படை வீரர்கள் பரிதாபமாக இறந்தனர்.

இந்த சம்பவத்துக்கு பிறகு வீரர்களுக்கான இன்சூரன்ஸ் தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், இன்சூரன்ஸ் தொகையை ரூ.15 லட்சமாக அதிகரிக்க தானே மாநகராட்சி முடிவு செய்துள்ளது. நாளை மறுநாள் நடக்கும் மாநகராட்சி பொதுக்குழு கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதன் மூலம் தானே மாநகராட்சியின் 5 தீயணைப்பு நிலையங் களில் பணி புரியும் 273 ஊழியர்கள் பயனடை வார்கள்.