தினமணி 17.06.2010
ராஜாஜி பூங்கா முருகன் கோயிலில் ரூ.1 லட்சம் உண்டியல் வசூல்
மதுரை, ஜூன் 16: மதுரை மாநகராட்சி ராஜாஜி சிறுவர் பூங்காவில் உள்ள அருள்மிகு தண்டபாணி திருக்கோயிலில் உண்டியல் எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் தலைமையிலும், தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல் முன்னிலையிலும் நடைபெற்ற இப்பணியில், மாநகராட்சி திரு.வி.க.பள்ளியின் நாட்டு நலப்பணி மாணவர்கள் ஈடுபட்டனர்.
எண்ணிக்கையின் முடிவில் காணிக்கையாக பக்தர்கள் ரூ.1,02,371 அளித்தது தெரியவந்தது. இதுகுறித்து கமிஷனர் கூறுகையில், இந்தத் தொகை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் கோயில் நிதியில் சேர்க்கப்பட்டுள்ளது; இக்கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும், ஏனைய பராமரிப்புச் செலவுக்கும் பயன்படுத்தப்படும் என்றார்.