தினகரன் 23.07.2010
திண்டிவனம் நகராட்சியில் 2 பேருக்கு பணிக்கொடை
திண்டிவனம், ஜூலை 23: நகராட்சியில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்கள் பணியில் இருக்கும் போதே இறந்தால் அவர்களுடைய குடும்பங்களுக்கு நிதி கொடுப்பது வழக்கம். இதேபோல் திண்டிவனம் நகராட்சியில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தவர் ஆறுமுகம், துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தவர் கிருஷ்ணம்மாள். இவர்கள் இருவரும் பணி செய்து கொண்டிருக்கும் போதே இறந்தனர். இதைத்தொடர்ந்து இவர்களின் குடும்பங்களுக்கு பணிக்கொடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட நகர்மன்றத் தலைவர் பூபாலன் ஆறுமுகத்தின் மனைவி மலர், கிருஷ்ணம்மாளின் மகள் மாரியம்மாள் ஆகியோருக்கு முறையே தலா. ரூ. 11.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இதில் ஆணையர் முருகேகன், நகர மன்ற உறுப்பினர்கள் ஏழுமலை, முருகன், ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்