தினமணி 28.07.2010
203 பயனாளிகளுக்கு ரூ.38.50 லட்சம்
மதுரை, ஜூலை 27: மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலப் பகுதிகளில் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டப் பயனாளிகள் 203 பேருக்கு ரு.38.50 லட்சம் காசோலைகளை மேயர் ஜி.தேன்மொழி வழங்கினார்.
மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதற்கு மேயர் ஜி.தேன்மொழி தலைமை வகித்தார். ஆணையர் எஸ்.செபாஸ்டின், துணை மேயர் மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அறுவுறுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் 203 பேருக்கு ரூ,38.50 லட்சம் மதிப்பில் காசோலைகளை மேயர் வழங்கினார்.
பின்னர் ஆணையர் கூறுகையில், மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிச் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனுப்பானடியில் ரூ.3 கோடி மதிப்பில் நவீன ஆடு வதை செய்யுமிடம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சனிக்கிழமை (ஜூலை 31) முஸ்லிம் ஜமாத் மற்றும் ஆட்டு இறைச்சி விற்பனையாளர்களை அழைத்து செயல்முறை விளக்கம் நடைபெற உள்ளது. பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்பு பெறாதவர்கள் உடனே பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதில் கிழக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் என்.நன்மாறன், மண்டலத் தலைவர் வி.கே.குருசாமி, தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், முதன்மை நகர் நல அலுவலர் டாக்டர் சுப்பிரமணியன், நகரமைப்பு அலுவலர் முருகேசன், உதவி ஆணையர் (கிழக்கு) யு.அங்கையற்கண்ணி உள்பட பலர் கலந்து கொண்டனர்