Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உள்ளகரம் நகராட்சி தீர்மானம் பூங்காக்களை பராமரிக்க மக்களிடம் நிதி வசூல்

Print PDF

தினகரன் 04.08.2010

உள்ளகரம் நகராட்சி தீர்மானம் பூங்காக்களை பராமரிக்க மக்களிடம் நிதி வசூல்

ஆலந்தூர், ஆக. 4: உள்ளகரம் புழுதிவாக்கம் நகராட்சி கூட்டம் மன்ற கூடத்தில் நடந்தது. நகராட்சி தலைவர் ஜே.கே.ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். துணை தலைவர் குமரமணிகண்டன், செயல் அலுவலர் கிரிஜா, பொறியாளர் வைத்திலிங்கம் முன்னிலை வகித்தனர்.

சுகாதார பணிகளுக்காக 20 மூன்று சக்கர சைக்கிள்களை ரூ4.2 லட்சத்தில் வாங்க டெண்டர் விடுவது, நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள காலிமனைகளை தனியார் ஆக்கிரமிக்காமல் இருக்க ரூ1.6 லட்சம் செலவில் 20 பெயர் பலகைகள் வைப்பது, தந்தை பெரியார், ஷீலா நகர் பூங்காவை சீரமைக்க ரூ25 லட்சம் செலவிடுவது, இதில் பொதுமக்கள் பங்களிப்பாக ரூ2.5 லட்சம் வசூலிப்பது, மேலும் 80 சதவீதத்தை பெருநகர வளர்ச்சி குழுமத்திடமும், நகராட்சி சார்பில் 10 சதவீதம் செலவழிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.