Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பேராவூரணி பேரூராட்சி வளர்ச்சிப்பணிகளுக்காக ரூ.25 கோடி நிதி

Print PDF

தினமலர் 18.02.2010

பேராவூரணி பேரூராட்சி வளர்ச்சிப்பணிகளுக்காக ரூ.25 கோடி நிதி

பேராவூரணி : பேராவூரணி பேரூராட்சி வளர்ச்சிப்பணிகளுக்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சித் தலைவர் அசோக்குமார் தெரிவித்தார்.இது குறித்து அவர் கூறியதாவது:பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும், குடிநீர் வழங்கல் மேம்பாடு, சுகாதார மேம்பாடு, மழைநீர் வடிகால் மேம்பாடு, திடக்கழிவு மேலாண்மை. போக்குவரத்து மேலாண்மை, தெருவிளக்கு மேம்பாடு, குடிசைப்பகுதி மேம்பாடு மற்றும் நகர்புற வறுமைக் குறைப்பு திட்டம் உட்பட பணிகளை ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் ரூபாய் 24.90 கோடி மான்யத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பேராவூரணி நகர வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்த முதல்வர் கருணாநிதிக்கும், மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்துக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. பணிகள் நிறைவுறும் நிலையை பொறுத்து மேலும் நிதி வழங்கப்படும். இதற்கான பங்குத்தொகை 10 சதவீததத்தை பேரூராட்சி நிர்வாகம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அசோக்குமார் கூறினார்.பேரூராட்சி நிர்வாக அதிகாரி ஜனார்த்தனன், அலுவலர் சேஷாத்ரி ஆகியோர் உடன் இருந்தனர்.