Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

1.52 கோடி மதிப்பில் கட்டடங்கள் திறப்பு

Print PDF

தினமலர் 06.03.2010

1.52 கோடி மதிப்பில் கட்டடங்கள் திறப்பு

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் 1.52 கோடி ரூபாய் மதிப் பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள், படகு குழாம், நூலக ட்டடங்களை இன்று (6ம் தேதி) துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.பரங்கிப்பேட்டை பேரூராட்சி பகுதிகளில் 70 லட்சம் ரூபாய் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம், 50 லட்சம் மதிப்பில் சுற்றுலா வளர்ச்சி மையத்தில் படகு குழாம், குடில்கள், உணவு விடுதி மற்றும் குழந்தைகள் பூங்கா, 20 லட்சம் மதிப்பில் பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு புதிய அலவலக கட்டடம் அடிக்கல் நாட்டுதல், 7 லட்சம் ரூபாய் மதிப்பில் வாரசந்தை, நாளங்காடி, 4 லட் சத்து 43 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நூலக கட்டடம் உள் ளிட்டவைகளை காட்டுமன்னார்கோவிலில் உள்ள எம்.ஆர்.கே., பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில் அமைச்சர் பன்னீர்செல் வம் தலைமையில் துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.விழாவில் பேரூராட்சி சேர்மன் முகமது யூனுஸ், துணைத் தலைவர் செழியன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்கின்றனர்.

Last Updated on Saturday, 06 March 2010 09:46