தினமலர் 06.03.2010
பேரணாம்பட்டில் திட்டப்பணிகள்மண்டல இயக்குனர் பார்வை
பேரணாம்பட்டு:பேரணாம்பட்டு நகராட்சியில் ரூ.1கோடியே 3.50 லட்சம் செலவில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை மண்டல இயக்குனர் பார்வையிட்டார்.ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகராட்சி அலுவலக கட்டடம், ரூ.7. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தலைமை நீரேற்று தொட்டி, ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய ஆடு அறுக்கும் தொட்டி மற்றும் எம்.பி.,நிதியில் பஜார் வீதி மற்றும் அரசு மருத்துவமனை எதிரில் ரூ.5லட்சம் மதிப்பீட்டில் பொருத்தப்பட்டு வரும் ஹைமாஸ் விளக்குகள், எம்.எல்.ஏ.,நிதியின் கீழ் ரூ.21லட்சம் மதிப்பீட்டில் செய்யப்பட்டு வரும் திட்ட பணிகளை வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திட்டப் பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார். நகராட்சி தலைவர் ஆலியார் ஜூபேர் அமது, செயல் அலுவலர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர் பெண்ணரசி சத்யா உட்பட நகராட்சி கவுன்சிலர்கள் உடன் கலந்து கொண்டனர்.