தினமலர் 18.03.2010
மடத்துக்குளம் பேரூராட்சி சுங்கவரி வசூல் ஏலம்
மடத்துக்குளம்: மடத்துக்குளம் பேரூராட்சிக்குக்கு சொந்தமான இடத்திற்குட்பட்ட குத்தகை இனங்கள் செயல் அலுவலர் திருமலைசாமி முன்னிலையில் ஏலத்தில் விடப்பட்டது. பஸ் ஸ்டாண்டுக்குள் வரும் பஸ்களுக்கு கட்டணம் வசூலிக்கும் உரிமை, வாரச் சந்தையில் சுங்கம் வசூலிக்கும் உரிமை, தினசரிமார்கெட், கமிஷன் மண்டி நடத்தும் உரிமை, பேரூராட்சி எல்லையில் இறைச்சி கடைகள் நடத்தும் உரிமை, சர்க்கார் கண்ணாடிப்புத்தூர் அமராவதி ஆற்றில் பரிசல் விடும் உரிமை, தென்னை மரங்களின் மேல் பலனை அனுபவிக்கும் உரிமை, பேரூராட்சிக்குட்பட்ட வாரச்சந்தை புளிய மரங்களின் மேல் பலனை அனுபவிக்கும் உரிமை, சுகாதார வளாகங்களில் கட்டணம் வசூலிக்கும் உரிமை,தெருவிளக்கு உபகரணங்கள்,பழைய தினசரி நாளிதழ் எடைக்கு எடுத்து கொள்ளுதல் உட்பட்ட இனங்கள் ரூ.5.50 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.