தினமலர் 29.03.2010
ரூ. 8 லட்சத்துக்கு வாரச்சந்தை ஏலம்
வெள்ளகோவில்: வெள்ளகோவில் வாரச்சந்தை எட்டு லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. வெள்ளகோவில் நகராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை, புதிய பஸ் ஸ்டாண்டில் பஸ் நுழைவு கட்டணம் வசூலித்தன் ஆகிய இனங்களுக்கான ஏலம் நகராட்சி கூட்ட அரங்கில நேற்று நடந்தது. செயல் அலுவலர் சோமசுந்தரம், தலைமை எழுத்தர் ராஜா முன்னிலை வகித்தனர். வாரச்சந்தை 8.10 லட்சம் ரூபாய்க்கும், பஸ் ஸ்டாண்ட்டு 6.25 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் போனது.