Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பஸ் நுழைவுக் கட்டண வசூல் உரிமம் ஏலம்

Print PDF

தினமணி 30.03.2010

பஸ் நுழைவுக் கட்டண வசூல் உரிமம் ஏலம்

ஒட்டன்சத்திரம், மார்ச் 29: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேரூராட்சி பகுதிக்கு வரும் பஸ்களுக்கு 2010-2011-க்கான நுழைவு வரிக் கட்டணம் வசூல் செய்யும் உரிமம் ஏலம், பேரூராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஐந்திற்கும் மேற்பட்டோர் பணம் கட்டி ஏலத்தில் கலந்து கொண்டனர்.

அதிகப்படியான ரூ.11 லட்சத்து 72,500-க்கு ஏலம் கேட்ட முத்துகண்ணன் என்பவருக்கு உரிமம் வழங்கப்பட்டதாக, பேரூராட்சியின் செயல் அலுவலர் மா.ஜெயக்கொடி தெரிவித்தார். மேலும் பஸ் நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு வாகனத்திற்கும் ரூ.8 மட்டுமே கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்றும் அதிக கட்டணம் வசூல் செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்தார்

Last Updated on Tuesday, 30 March 2010 11:25