தினமலர் 01.04.2010
கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டைசமாளிக்க ரூ.15 லட்சம் நிதி தேவை ஒடுகத்தூர் பேரூராட்சி கடிதம்
அணைக்கட்டு:கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ. 5 லட்ம் நிதி வேண்டும் என்று ஒடுகத்தூர் பேரூராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.ஒடுகத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. பாலாற்று கூட்டு குடிநீர் மற்றும் வார்டுகளில் ஆங்காங்கே உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்போது வெயில் அதிக அளவு காணப்படுவதால் பாலாற்றில் இருந்து வரும் கூட்டு குடிநீர் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் பேரூராட்சி நிர்வாகத்தால் மக்களுக்கு சரிவர குடிநீர் சப்ளைசெய்ய முடியாமல் திணறுகின்றனர்.
இது குறித்து பேரூராட்சி தலைவர் ஜெயந்தி கூறியதாவது:குடிநீர் சம்பந்தமாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பட்டுள்ளது. அதில், கோடை காலத்தில் குடிநீர் தட்பாட்டை சமாளிக்க ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைப்பது, மேநீர் தேக்கத் தொட்டி கட்டுவது போன்ற பணிகளை மேற்கொள்ள ரூ.14.9 லட்சம் தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார