தினகரன் 26.05.2010
8 மாநகராட்சியில் குடிநீர் கட்டண நிலுவை மீதான வட்டி ரூ.200 கோடி தள்ளுபடி
பெங்களூர், மே 26: பெங்களூரை தவிர மாநிலத்தின் இதர மாநகராட்சியில் செலுத்தப்படாமல் இருக்கும் குடிநீர் கட்டணத்தின் மீதான வட்டி ரூ.200 கோடியை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூர் மாநக ராட்சியை தவிர மாநிலத்தில் உள்ள மைசூர், பெல்லாரி, தாவணகெரெ, மங்களூர், தும்கூர், ஹூப்ளி &தார்வார், பெல்காம், குல்பர்கா மாநகராட்சியில், இதுவரை செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள குடிநீர் கட்டணத்தின் மீதான வட்டி ரூ.200 கோடியை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும் நகரங்களில் சட்டவிரோத குடிநீர் இணைப்பை ஒழுங்குபடுத்தும் வகையில், மீட்டர்களை பொருத்தவும் முடிவு செய்துள்ளது.
விவசாய கடன் வட்டி தள்ளுபடி போன்று, குடிநீர் நுகர்வோர் தங்கள் கட்டணத்தின் பிரதான நிதியை மட்டும் கட்டினால் போதும். சிம்பிள் மற்றும் காம்பவுண்டு வட்டிகளை மாநில அரசு தள்ளுபடி செய்துள்ளது.
பிரதான நகரங்களில் குடிநீர் வினியோகம் பராம ரிப்பை, சுவிட்சர்லாந்து நிறுவனத்திடம் ஒப் படைக்க அரசு திட்டமிட் டுள்ளது. இதற்கு வசதியாக குடிநீர் மீட்டர்களை பொருத்தவுள்ளது. மேலும் ரூ.300 கோடி வருவாயை நுகர்வோரிடமிருந்து பெறுவதற்காக ரூ.200 கோடி வட்டியை தள்ளுபடி செய்ய நிதித்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
நிலத்தடி குடிநீர் வினி யோக முறையும் தனியாருக்கு ஒப்படைக்கப் பட்டு விட்டால், மாநகராட்சிக்கும் குடிநீர் வினியோக திட்டத்திற்கும் எந்தவித தொடர்பும் இருக் காது என்பது குறிப்பிடத் தக்கது