Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Finance

நகராட்சியில் கூடுதல் கட்டட பணி : நிதி ஒதுக்குவதில் சிக்கல்

Print PDF

தினமலர் 13.04.2010

நகராட்சியில் கூடுதல் கட்டட பணி : நிதி ஒதுக்குவதில் சிக்கல்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் கட் டட பணி முடிக்கப்படாததால் கூடுதல் நிதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்தின் பழைய கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டது. முதல் தளம் பணிகள் துவங்கி தரைத் தளம் ஜல்லி போடப்பட்டது. இரண்டாம் தளம் ஜல்லி போட ஒரு மாதத்துக்கு முன் 'சென்டரிங்' அடிக்கப்பட்டது. 5 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள பணிகளை நகராட்சி மண்டல பொறியாளர் பார்வையிட்டு அனுமதி தர வேண்டும். 15 நாட்களுக்கு முன் மண்டல பொறியாளர் அன்பழகன் பார்வையிட்டு சென்டரிங் முட்டுகள் சரியில்லை. அதை சரி செய்த பிறகே ஜல்லி போட வேண்டுமென கூறினார். உடனே முட்டுகள் சரி செய்யப்பட்டது. மீண்டும் மண்டல பொறியாளர் பார்வையிட்டு அனுமதி கொடுத் தால் தான் ஜல்லி போட வேண்டுமென நகராட்சி பொறியாளர் கூறியதால் ஜல்லி போடும் பணி நடைபெறவில்லை. மண்டல பொறியாளருக்கு தகவல் கொடுத்தும் அவர் பார்வையிட வரவில்லை. இதனால் குறிப்பிட்ட காலத்தில் பணியை முடிக்க முடியவில்லை. கட்டட பணி முழுமையாக முடியாத நிலையில் நகராட்சி வருவாய் நிதியிலிருந்து அழகுபடுத்துதல், குளிர்சாதன வசதி செய்வதற்கு என 15 லட்சம் ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. அரசு மூலம் ஒதுக்கப்பட்ட நிதியில் பணி முடியாததால் மேற் கொண்டு வேறு நிதியை ஒதுக்க முடியாது என உயர் அதிகாரிகள் கூறியுள் ளனர். அதிகாரிகளின் 'ஈகோ' பிரச் னையால் கட்டட பணி முடியாததால் நகராட்சிக்கு அரசு புதிய நிதிகள் ஒதுக்கவில்லை. தேர்தல் நெருங் கும் நிலையில் கூடுதலாக நிதி கிடைக்க வாய்ப்புள்ளது. உடனடியாக கட்டட பணியை முடித்து அதிக நிதி பெற அதிகாரிகளும், மக் கள் பிரதிநிதிகளும் முயற்சிக்க வேண்டும்.

Last Updated on Tuesday, 13 April 2010 07:05
 

சாத்தை., டவுன் பஞ்., கிணற்றை உயர்த்தி கட்ட நிதி ஒதுக்கீடு

Print PDF
தினமலர் 06.04.2010

சாத்தை., டவுன் பஞ்., கிணற்றை உயர்த்தி கட்ட நிதி ஒதுக்கீடு

சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் பாதுகாப்பில்லாத டவுன் பஞ்.,தண்ணீர்தொட்டி கிணறு கரையை உயர்த்தி மூடி போட பொது நிதியிலிருந்து பணம் ஒதுக்கப்பட்டுள்ளது என நிர்வாக அதிகாரி சுயம்பு தெரிவித்தார்.சாத்தான்குளம்-நாசரேத் ரோட்டில் அதிக போக்குவரத்து உள்ள பகுதியில் தரைமட்டத்தில் டவுன் பஞ்.,2ம் நம்பர் வாட்டர் டேங் கிணறு உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே நெடுஞ்சாலைத்துறையினர் ரோட்டின் ஓரத்தில் தடுப்புச்சுவர் கட்டி எச்சரிக்கைப் போர்டு வைக்க வேண்டும். டவுன் பஞ்.,நிர்வாகத்தினர் கிணற்றின் கரையை உயர்த்தி கம்பிவலை மூடி போட வேண்டும் என தினமலரில் செய்தி வந்தது. இது சம்பந்தமாக டவுன் பஞ்.,நிர்வாக அதிகாரி சுயம்பு கூறியதாவது, சாத்தான்குளம் டவுன் பஞ்.,பொது நிதியிலிருந்து 2ம் நம்பர் வாட்டர்டேங் கிணறு கரையை உயர்த்தி கம்பிவலை மூடி போடவும் மேலும் வாரச்சந்தையின் அருகில் உள்ள மாற்றுத்திறனுடையோர் பயிற்சி கூட்டத்திலிருந்து கழிவுநீர் செல்ல வடிகால் அமைப்பதற்கும் 85 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணி தொடங்கப்படும் என கூறினார்.

Last Updated on Tuesday, 06 April 2010 06:14
 

கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டைசமாளிக்க ரூ.15 லட்சம் நிதி தேவை ஒடுகத்தூர் பேரூராட்சி கடிதம்

Print PDF

தினமலர் 01.04.2010

கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டைசமாளிக்க ரூ.15 லட்சம் நிதி தேவை ஒடுகத்தூர் பேரூராட்சி கடிதம்

அணைக்கட்டு:கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ. 5 லட்ம் நிதி வேண்டும் என்று ஒடுகத்தூர் பேரூராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.ஒடுகத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. பாலாற்று கூட்டு குடிநீர் மற்றும் வார்டுகளில் ஆங்காங்கே உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்போது வெயில் அதிக அளவு காணப்படுவதால் பாலாற்றில் இருந்து வரும் கூட்டு குடிநீர் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் பேரூராட்சி நிர்வாகத்தால் மக்களுக்கு சரிவர குடிநீர் சப்ளைசெய்ய முடியாமல் திணறுகின்றனர்.

இது குறித்து பேரூராட்சி தலைவர் ஜெயந்தி கூறியதாவது:குடிநீர் சம்பந்தமாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பட்டுள்ளது. அதில், கோடை காலத்தில் குடிநீர் தட்பாட்டை சமாளிக்க ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைப்பது, மேநீர் தேக்கத் தொட்டி கட்டுவது போன்ற பணிகளை மேற்கொள்ள ரூ.14.9 லட்சம் தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார

Last Updated on Thursday, 01 April 2010 07:01
 


Page 27 of 37