தினமலர் 12.05.2010
தினமலர் செய்தி எதிரொலி பணிகளை முடிக்க கமிஷனர் உத்தரவு
பண்ருட்டி : பண்ருட்டியில் சுகாதார,வளர்ச்சி பணிகளை விரைவுபடுத்த நகராட்சி கமிஷனர் உத்திரவிட் டுள்ளார்.பண்ருட்டி நகராட்சி செயல்பாடு குறித்து 10ம் தேதி தினமலரில் விரிவாக செய்தி வெளியிடப் பட்டது. இதனையடுத்து நேற்று முன்தினம் நகராட்சி கமிஷனர் உமாமகேஸ்வரி மேலாளர் ஜெயலட்சுமி, சுகாதார அலுவலர் ராஜேந்திரன், பொறியாளர் சுமதி செல்வி ஆகியோரிடம் பணிகள் விரைவுபடுத்த உத்திரவிட்டார். அப்போது சுகாதார அலுவலர், ஆய்வாளர்கள் இல்லாத போது பணிகள் சிறப்பாக நடந்ததை சுட்டிக்காட்டி நகரத்தில் சுகாதாரப் பணிகளை அலுவலர் உள்ளிட்டோர் ஆய்வு செய்ய வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இன்ஜினியர்களிடம் வளர்ச்சி பணிகளை துரிதப் படுத்துவது உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.