தினகரன் 20.05.2010
ஜூம்மா மசூதி பகுதியில் முதல்கட்ட மறுசீரமைப்பு மாநகராட்சி தொடங்கியது
புதுடெல்லி, மே 20: ஜூம்மா மசூதி பகுதியில் முதல்கட்ட மறுசீரமைப்பு பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.
வரலாற்று புகழ்பெற்ற ஜூம்மா மசூதி பகுதியில் ஏராளமான ஆக்ரமிப்புகள் உள்ளன. இதனால் முன்பு மசூதியை சுற்றியிருந்த ஏராளமான இடம் குறுகிவிட்டது. மேலும், இப்பகுதியில் குப்பை கூளங்கள் அதிகளவில் உள்ளன. இவற்றை எல்லாம் சரி செய்து ஜூம்மா மசூதிக்கு மீண்டும் புதுப்பொலிவு அளிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.
இதற்காக தயாரிக்கப்பட்ட ரூ.1,200 செலவிலான திட்டத்துக்கு மாநகராட்சி கடந்த மாதம் அனுமதி அளித்தது. ஏற்கனவே இத்திட்டத்துக்கு கடந்த ஆண்டு நிலைக்கு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜூம்மா மசூதி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் முதல்கட்ட பணியை மாநகராட்சி தொடங்கி உள்ளது. இதில் மசூதியை சுற்றியுள்ள பகுதிகளில் சுத்தம் செய்வதும் ஒரு பணியாகும்..
மசூதியை சுற்றியுள்ள இடங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்ரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் விரைவில் அகற்றுவார்கள். மறுசீரமைப்பு திட்டத்துக்கு பின்னர் ஜூம்மா மசூதி புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.