Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

செம்பாக்கம் பேரூராட்சியில் நீர்த்தேக்க தொட்டி, பூங்கா அமைச்சர் திறந்து வைத்தார்

Print PDF

தினகரன்   28.06.2010

செம்பாக்கம் பேரூராட்சியில் நீர்த்தேக்க தொட்டி, பூங்கா அமைச்சர் திறந்து வைத்தார்

தாம்பரம், மே 28: செம்பாக்கம் பேரூராட்சியில் ரூ.11 லட்சம் செலவில் ராதே ஷியாம் அவென்யூவில் அண்ணா நூற்றாண்டு நினைவு பூங்கா, சாந்தி நகரில் ரூ.2 லட்சத்த 60,000 செலவில் சிறுவர் பூங்கா, திருமலை நகர், கணேஷ் நகர், 2வது வார்டு அம்பேத்கர் தெரு ஆகிய இடங்களில் ரூ.7 லட்சத்து 30,000 செலவில் 3 ரேஷன் கடைகள், வி.ஜி.பி. சரவணா நகரில் ரூ.7 லட்சத்தில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று நடந்தது.

செம்பாக்கம் பேரூராட்சி தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். அமைச்சர் அன்பரசன், 525 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கி, புதிய பூங்கா மற்றும் கட்டிடங்களை திறந்து வைத்தார்.

தாம்பரம் எம்எல்ஏ ராஜா, பரங்கிமலை ஒன்றிய தலைவர் ஏழுமலை, ஆர்.டி.. சவுரிராஜன், செயல் அலுவலர் வெங்கடேசன் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.