தினகரன் 31.05.2010
சூறாவளியால் சேதம் 5 லட்சத்தில் 50 தெரு விளக்கு
ஜீயபுரம், மே 31: சூறாவளிக் காற்றில் சேதமடைந்த 50க்கும் மேற்பட்ட தெரு மின் விளக்குகளை மாற்ற சிறுகமணி பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிறுகமணி தேர்வு நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் அதன் தலைவர் ராஜலிங்கம் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் தங்க வேல், செயல் அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பிறப்பு இறப்பு பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் 50 தெரு மின் விளக்குகள் அமைப்பது. சூறாவளிக் காற்றினால் பேரூராட்சி பகுதியில் சாய்ந்து சேதமடைந்த 40 க்கும் மேற்பட்ட தெருமின் விளக்குகளுக்கு டியூப் லைட் பொறுத்துவது. அரசி மலையாளி கோவில் தேர்த்திருவிழா ஜூன் 2ம் தேதிவரை நடைபெறுவதால் ஜே.சி.பி. மூலம் முட்செடிகளை அப்புறப்படுத்துவது, பொது சுகாதார உபயோகத்திற்காக தேவையான தள வாட சாமான்கள் வாங்குவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரூராட்சி தீர்மானம்