தினகரன் 01.06.2010
தா.பேட்டை பேரூராட்சியில் ரூ.53 லட்சம் வளர்ச்சி பணி
தா.பேட்டை, ஜூன் 1: தா.பேட்டை பேரூராட்சி சாதாரண கூட்டம், கூட்ட மன்றத்தில் நேற்று நடந்தது. பேரூராட்சி தலைவர் மயில்வாகணன் தலைமை வகித்தார். துணை தலைவர் ராஜலெட்சுமி கணேசன், நிர்வாக அலுவலர் இளவரசி முன்னிலை வகித்தனர்.
2010&11ம் ஆண்டுக்கான அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தா.பேட்டை புதிய பேருந்து நிலையம் முதல் பழைய மார்க்கெட் வரை ரூ.10 லட்சத்தில் புதிய தார்சாலை, 1வது வார்டு குரும்பர் தெருவில் ரூ.10 லட்சத்தில் சமுதாயக்கூடம், 5வது வார்டு செவந்தாம்பட்டியில் ரூ.6.55 லட்சத்தில் 60 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, வடமலைப்பட்டியில் ரூ.2.80 லட்சத்தில் சிமென்ட் சாலை, புதிய பஸ் நிலையத்தில் ரூ.10 லட்சத்தில் வணிக வளாகம் கட்டுதல் என ரூ.53.40 லட்சத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்கள் குமார், பழனியப்பன், வசந்தா, மணிமேகலை பெரி யசாமி, சம்பூர்ணம், பிச்சு மணி, ராஜப்பா, ரமேஷ், ரமேஷ்பாபு பங்கேற்றனர்.