Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதுப்பேட்டை டாம்ஸ் சாலையில் நவீன பேருந்து நிறுத்தம் பூங்கா கட்டுமான பணி

Print PDF

தினகரன்     03.06.2010

புதுப்பேட்டை டாம்ஸ் சாலையில் நவீன பேருந்து நிறுத்தம் பூங்கா கட்டுமான பணி

 சென்னை, ஜூன் 3: புதுப்பேட்டையில் ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் நவீன பேருந்து நிறுத்தங்கள், புதிய பூங்கா கட்டுமானப் பணியை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் இன்று தொடங்கி வைக்கிறார்.

புதுப்பேட்டை, டாம்ஸ் சாலையில் 9 மீட்டர் நீளம் 3 மீட்டர் அகலத்தில் 4 நவீன பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படுகிறது. டாம்ஸ் சாலையில் கூவம் கரையோரம் ஆயிரம் சதுர அடி பரப்பளவில் நவீன பூங்கா அமைகிறது.

மேலும் தற்போது 14 மீட்டர் அகலம் உள்ள டாம்ஸ் சாலை 16 மீட்டர் அளவுக்கு அகலப்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது.

மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இந்த பணி நிறைவேற்றப்படுகிறது. இது ஒப்பந்தத்தின்படி 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்றாலும் 4 மாதத்திலேயே முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

இந்த கட்டுமானப் பணி தொடக்கவிழா இன்று காலை 11 மணிக்கு டாம்ஸ் சாலையில் நடக்கிறது. மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் பணியை துவக்கி வைக்கிறார்.

விழாவுக்கு சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்குகிறார். மாநகராட்சி ஆணையர் ராஜேஷ்லக்கானி மற்றும் மண்டலக்குழு, நிலைக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.