Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாவட்டத் திட்டப் பணிகள்: ப.சிதம்பரம் ஆய்வு

Print PDF

தினமணி 08.06.2010

மாவட்டத் திட்டப் பணிகள்: .சிதம்பரம் ஆய்வு

சிவகங்கை, ஜூன் 7: சிவகங்கை மாவட்ட திட்டப் பணிகள் தொடர்பாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் இக் கூட்டம் திங்கள்கிழமை பிற்பகலில் நடைபெற்றது. இந்து அறநிலையத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் மகேசன் காசிராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் ஊரக வளர்ச்சித் திட்டங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், இந்திரா காந்தி நினைவு குடியிருப் புத் திட்டம், பொன் விழா கிராம சுயவேலைவாய்ப்புத் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், விரைவுபடுத்தப்பட்ட ஊரக குடிநீர்த் திட்டம், முழு சுகாதார இயக்கம், தேசிய சமூக நலத்

திட்டம், ஒருங்கிணைந்த நீர்வடிப் பதி மேலாண்மைத் திட்டம், நில உடமை ஆவணங்கள் கணினிமயமாக்கல் திட்டம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார் ப.சிதம்பரம்.

பிற்பகல் 2 மணிக்குத் துவங்கி மாலை 4 மணி வரை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் எம்.எல்..க்கள் சுந்தரம், சுப. மதியரசன், மாவட்ட ஊராட்சித் தலைவர் பாண்டி, துணைத் தலைவர் சேங்கை மாறன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அமானுல்லா, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியக் குழுத் தலைவர்கள், அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொணடனர்.

கூட்டத்தில், சிவகங்கை மற்றும் மானாமதுரை எம்.எல்..க்கள் கலந்து கொள்ளவில்லை. ஓரத்தநாட்டில் கட்சி தொடர்பான பணிக்குச் சென்றுவிட்டதால் கலந்து கொள்ளமுடியவில்லை என்றார் சிவகங்கை இந்திய கம்யூ. எம்.எல்.. எஸ்.குணசேகரன். அரசு நிகழ்ச்சிகளில் பொதுவாகக் கலந்து கொள்வது கிடையாது என்றார் மானாமதுரை அதிமுக எம்.எல்..