Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி வளர்ச்சி பணியை வேளாண் அமைச்சர் ஆய்வு

Print PDF

தினகரன் 09.06.2010

மாநகராட்சி வளர்ச்சி பணியை வேளாண் அமைச்சர் ஆய்வு

சேலம், ஜூன் 9: சேலம் மாநகராட்சியின் வளர்ச்சி பணியை வேளாண் அமைச் சர் ஆய்வு செய்தார்.

சேலம் மாநகராட்சி சார்பில் ரூ.4.2 கோடியில் திருமணிமுத்தாறு பணிகளும், ரூ.9.17 கோடியில் வெள்ளக்குட்டை ஓடை அபிவிருத்தி திட்டப்பணிகளும், ரூ.1.56 கோடியில் ஆட்கொல்லி பாலம் பணியும், ரூ.3.85 கோடியில் ஆனந்தா இறக்க பாலம் பணியும், ரூ.3 கோடியில் அப்சரா பாலம் பணியும் நடந்து வருகிறது.

இந்த பணிகளை தமிழக வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், பணிகளின் தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்து விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கலையரசி, மேயர் ரேகா பிரியதர்ஷினி, ஆணையாளர் பழனிசாமி, வருவாய் கோட்டாட்சியர் குழந்தைவேலு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.