Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

முதுகுளத்து£ர் பேரூராட்சியில் ரூ.50 லட்சத்தில் திட்டப்பணிகள்

Print PDF

தினகரன் 09.06.2010

முதுகுளத்து£ர் பேரூராட்சியில் ரூ.50 லட்சத்தில் திட்டப்பணிகள்

கடலாடி, ஜூன் 9: முதுகுளத்து£ர் பேரூராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.50லட்சத்தில் பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

முதுகுளத்து£ர் பேரூராட்சியில் 2010&2011ல் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், திடல் தெரு மற்றும் செல்வியம்மன் கோயில் தெருவில் 10லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணியும், பேரூராட்சி அலுவலகம் மேல்தளம் கட்ட ரூ.10லட்சம், திடல் ஊரணியில் சுற்றுச்சுவர், படித்துறை கட்ட ரூ.5லட்சம், அம்பேத்கார் தெரு, வண்ணார்தெரு, காமராஜர் தெரு, நாராயண ஆசாரி தெரு ஆகிய பகுதிகளில் ரூ.9லட்சத்தில் சிமென்ட் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ரூ.11லட்சத்தில், செல்வியம்மன் கோயில் தெரு வடிகால் அமைத்தல், உலகன்தோப்பு காலனியில் வடிகால் அமைத்தல், செக்கடி தெருவில் சிமென்ட் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. மொத்தம் ரூ.50லட்சத்தில் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகவலை பேரூராட்சி செயல் அலுவலர் முனியாண்டி தெரிவித்தார். பேரூராட்சி துணைத்தலைவர் ஷாஜகான் உடனிருந்தார்.